Friday 15 June 2018

அவிழ்க்க முடியாத மர்மங்கள் இம்மண்ணில்!!!!

உலகில் இன்னும் விடை தெரியாத மர்மங்கள்

பொருளடக்கம்:

  • அன்டிகேதேரா மெக்கானிசம்
  • பண்டைய கால ராக்கெட் ஷிப்
  • பழைமையான இரும்பு ஸ்க்ரூ
  • ஸ்டோன் காலண்டர்
  • சைனீஸ் மொஸையிக் லைன்ஸ்
  • விபரித விளக்குகள் 
  • வெள்ளை பெண்மணி
  • எலிசா லேம் 
  • ப்ரடி ஜேக்சன்
  • மேரி மற்றும் UFO
  • உடல்-மூளை தொடர்பு 
  • அமானுஷ்ய சக்தி/ இ.எஸ்.பி (Psychic powers and ESP)
  • இறப்பை ஒத்த அனுபவங்கள்/ இறப்புக்குப் பின் வாழ்வு (புனர்ஜென்மம்?!)
  • யு.எஃப்.ஓ/UFOs
  • தேஜா வு (Déjà vu)
  • பேய்/பிசாசு/ஆவி
  • மர்மமாக மறையும் மனிதர்கள் (Mysterious Disappearances)
  • ஆறாவது அறிவு/இன்டியூஷன் (Intuition)
  • மனிதன் போன்ற மிருகம்/Bigfoot
  • டாவோஸின் முனுமுனுக்கும் பாடல் (The Taos Hum)


         இன்றைய உலகம் தொழில்நுட்ப விஞ்ஞானத்தை நோக்கி அதிவிரைவாக பயணித்துக் கொண்டு இருக்கும் வேளையில் விஞ்ஞானிகளால் கூட கண்டுபிடிக்க முடியாத பல மர்மங்களும் அமானுஷ்யங்களும் நிறைந்துள்ளது.
அவைகளை தெளிவாக மிக துல்லியமாக புரிந்து கொள்ள, இன்னும் 100 ஆண்டுகளாவது தேவைப்படும் என்பது ஆய்வளார்களின் கருத்தாகும். இவ்வாறு பல ஆண்டுகளாலாகியும் விடை அறியாத மர்மங்கள் பற்றி பார்ப்போம்.

அன்டிகேதேரா மெக்கானிசம்

1900-ஆம் ஆண்டு, கிரீஸ் நாட்டின் அருகே நடந்த கப்பல் விபத்து ஒன்றில் இருந்து கிடைத்தது இந்த மெக்கானிசம். இது எவ்வாறு உருவானது எப்படி வந்நது என்று இன்னும் எவராலுமே கண்டுபிடிக்க முடியாத மர்மமாகவே உள்ளது.

பண்டைய கால ராக்கெட் ஷிப்

ஜப்பானில் கண்டுப்பிடிக்கப்பட்ட பண்டைய கால, குகை ஓவியமாகும். இதில் ராக்கெட் போன்ற உருவம் தெளிவாக தெரிகிறது. இந்த ஓவியத்தின் காலகட்டம் 5000 கிபி ஆகும். இதுவும் ஏலியன்கள் சார்ந்த பலமான ஆதாரங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.

பழைமையான இரும்பு ஸ்க்ரூ

ரஷ்ய தலைநகரமான மாஸ்கோவில் 1998-ஆம் ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது இந்த 300 மில்லியன் ஆண்டுகள் பழைமையான ஸ்க்ரூ. டைனோஸர்கள் கூட உருவாக அந்த காலகட்டத்தில், இது எப்படி உருவாகியது, இதை யார் உருவாக்கி இருப்பார்கள் என்பது புரியாத புதிராக இன்னும் உள்ளது.

ஸ்டோன் காலண்டர்

எகிப்து நாட்டின் சஹாரா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இது தான் உலகின் முதல் கல் காலண்டர் ஆகும். சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன் உருவான இந்த கல் காலண்டர் சார்ந்த புரிதலும், இன்று வரை ஒரு கண்டுபிடிக்காத மர்மாகத்தான் உள்ளது.

சைனீஸ் மொஸையிக் லைன்ஸ்

கூகுள் மேப்பில் சிக்கிய இந்த விசித்திரமான கோடுகள் (Chinese mosaic lines)சீனாவின் கன்சு ஸெங் (Gansu Sheng) தீவுகளில் 2004-ஆம் ஆண்டில் தான் இது உருவாகி உள்ளது என்று கண்டுப்பிடிக்கப்பட்டது. இதன் அர்த்தம் இன்று வரை மர்மம் தான்….

விபரித விளக்குகள்

வித்தியாசமான விளக்குகள் வானில் பறப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம் என பல்வேறு நாட்டு மக்கள் சொல்ல கேட்டிருப்போம். ஏன், அவை அனைத்தும் புகைப்படங்களாக கூட வெளியாகி ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கீழே கொடுக்கப்பட்ட இந்த புகைப்படம் கடற்கரை ஓரத்தில் மக்கள் இளைப்பாறிக்கொண்டிருந்தபோது, இந்த விளக்குகள் வானில் பறந்தும் கடல் நீரிலும் மிதந்தடிபடி மறைந்து சென்றன.

வெள்ளை பெண்மணி

1975 ஆம் ஆண்டு Norfolk - இல் அமைந்துள்ள Worstead தேவாலயத்தில் Diane Berthelot என்ற பெண் அமர்ந்து மன்றாடிக்கொண்டிருக்கையில் அவருக்கு பின்னால் ஒரு வெள்ளை உருவம் இருந்தது புகைப்படத்தில் பதிவாகியுள்ளது.
அந்த வெள்ளை உருவம் ஒரு பெண் போல் தெரிகிறது. ஆனால் யார் எந்த வெள்ளை பெண்மணி என்பது குறித்து இன்றுவரை அறியவரவில்லை.

எலிசா லேம்

அமெரிக்கவில் 2013 ஆம் ஆண்டு இப்பெண் உயிரிழந்தார். ஆனால் எதற்காக இவர் உயிரிழந்தார் என்பது இதுவரை அறியப்படவில்லை.
இவரது உடல் ஒரு தண்ணீர் தொட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் உள்ள மர்மம் என்னவென்றால் இவர் இறந்தபின்னர் elevator க்குள் அடிக்கடி உள்ளே வந்து வெளியே செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

ப்ரடி ஜேக்சன்

விமான விபத்தின் போது Freddy Jackson உயிரிழந்துவிட்டார். இவர் இறந்து இரண்டு நாட்களுக்கு பின்னர் விமான ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த குழு புகைப்படத்தில் இவரது முகம் பதிவாகியுள்ளது.
விமான ஊழியர்கள் புகைப்படம் எடுக்கும்போது, இவரது இறுதிசடங்கு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேரி மற்றும் UFO

மிகவும் தத்ரூபமாக வரையப்பட்ட மாதாவின் இந்த படம் உலகம் முழுவதும் பிரபலமான ஒன்று. ஆனால் இந்த ஓவியத்தின் பின்னால் உள்ள பறக்கும் தட்டு எதற்காக? அது உண்மைதானா? என்பதற்கான அர்த்தம் தெரியவில்லை.
மாதாவின் புகைப்படத்திற்கு பின்னால் நின்றுகொண்டிருக்கும் நபருக்கு அருகில் நாய் ஒன்று நிற்கிறது. நாயுடன் நிற்கும் அந்த நபர் வானில் பறக்கும் மர்மதட்டை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறார். ஆனால் இதற்காக விளக்கம் இதுவரை அறியப்படவில்லை..

உடல்-மூளை தொடர்பு 

 நம் மூளை எப்படி நம்ம உடல பாதிக்குது அப்படிங்கிற விவரத்த, இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா மருத்துவத்துறை நமக்கு விளக்க தொடங்கி இருக்காங்க. உதாரணமா சொல்லனும்னா, சில நோய்களுக்கு  மாத்திரை என்று பிரத்தியேகமாக தயாரித்துக் கொடுக்காமல், ஒரு இனிப்பு மாத்திரையை , நோயைக் குணப்படுத்தும் என்றும் சொல்லி, நோயாளிகளுக்கு கொடுத்தால் மட்டுமே கூட சில நோய்களை குணப்படுத்த முடியும் என்பது மருத்துவத்துறையில் “ஒரு விளங்க முடியாக் கவிதை போலவே” வெகு காலமா இருந்து வருது! இதுக்கு ஆங்கிலத்துல “ப்ளாசிபோ எஃபெக்ட்”, அப்படின்னு சொல்றாங்க. ஆக, இது ஒரு நம்பிக்கை மட்டுமே (மாத்திரை அல்ல). இருந்தாலும் நோய் குணமடைகிறது. அது எப்படி? அது யாருக்கும் தெரியாது?! அதாவது, உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்வது எப்படி என்று எந்த புதுயுக மருத்துவத்தாலும் இதுவரை வரையறுத்துச் சொல்ல முடியவில்லை!

அமானுஷ்ய சக்தி/ இ.எஸ்.பி (Psychic powers and ESP)

உலகத்துல மனுஷனப் பத்தி 
மனுஷனாலேயே புரிஞ்சிக்க முடியாத விஷயங்கள்லேயே மிக முக்கியமானதுதான் இந்த அமானுஷ்ய சக்தி/இ.எஸ்.பி அப்படிங்கிறது! அதாவது, ஐப்புலன்களையும் தாண்டி உலகத்தை உணரக்கூடிய ஒரு சக்தி (எக்ஸ்ட்ரா சென்சரி பெர்சப்ஷன்/Extra-sensory perception (ESP)). ஆங்கிலத்தில் “இன்டியூஷன்” என்று சொல்லக்கூடிய, எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்கூட்டியே தெரிந்து (தீர்கதரிசி) சொல்வது எப்படி? என்பது இதுவரை யாருக்கும் புரியாத, ஆனால்  நம் எல்லோரையும் அதிர வைக்கும் ஒரு மர்மம்!  இதுல செஞ்ச ஆய்வுகள் இதுவரைக்கும் ஒரு தெளிவான பதிலை/கருத்தை சொல்லவே இல்லை. குழப்பமான, புரியாத ஆய்வு முடிவுகளையே கொடுத்திருக்கிறது  இ.எஸ்.பி பற்றிய ஆய்வுகள் அப்படிங்கிறாங்க விஞ்ஞானிகள்! இன்னும் சிலர், இந்த மாதிரி அமானுஷ்ய சக்தி பத்தின ஆய்வு என்னைக்குமே ஒரு தெளிவான முடிவைத் தராது, மனுஷனுக்கு அப்பாற்பட்டது அப்படின்னும் சொல்றாங்க. அப்ப்டின்னா, கடைசி வரைக்கும் இது ஒரு புரியாத புதிராவேதான் இருக்குமா? தெரியல, காலந்தான் பதில் சொல்லனும்!

இறப்பை ஒத்த அனுபவங்கள்
இறப்புக்குப் பின் வாழ்வு (புனர்ஜென்மம்?!)

நம்மில் சில பேர், சமயத்துல சாகிற நிலைக்குப் போய் பிழைத்துக் கொள்வதுண்டு. இதப்பத்தி சொல்லும்போது “செத்துப் பொழச்சவண்டா” அப்படின்னு சில பேர் சொல்வதுண்டு. அதாவது சாகும் தருவாய் வரைக்கும் சென்று பின் அதிர்ஷடவசமாக பிழைத்துக்கொள்வார்கள். ஆங்கிலத்தில் “Near-Death Experiences”, அப்படின்னு சொல்லுவாங்க. இந்த மாதிரி அனுபவம் இருக்கிறவங்க, அந்த அனுவபம் பத்தி விவரிக்கும்போது, “ஏதோ பாதாளத்துக்குள்ள போன மாதிரி இருந்தது, உடனே பிரகாசமான வெளிச்சத்துல வந்து,  சொந்த பந்தங்களோட இணைஞ்ச மாதிரி ஒரு உணர்வு” அப்படின்னு எல்லாம் சொல்லக் கேட்டிருப்போம் இல்லையா? (குறைந்தபட்சம் சினிமாவுலயாவது பார்த்திருப்போம்!) . அதாவது, கல்லரையையும் தாண்டிய ஒரு உணர்வு/வாழ்வு?! இதுமாதிரி கதைகள்? பல நம்மிடையே இருந்தாலும் இதுவரையில் யாரும் தகுந்த ஆதாரங்களோடு அப்படியொரு நிகழ்வை உறுதிப்படுத்தவில்லை என்பதே உண்மை!  இது ஒருபுறமிருக்க, இந்த மாதிரி ஆய்வுகள் செய்யும் விஞ்ஞானிகளோ, இவையெல்லாம் காயப்பட்ட/பாதிக்கப்பட்ட மூளையின் ஒரு வித உணர்வே தவிர இதில் உண்மை என்று எதுவுல் இல்லை அப்படின்னு சொல்றாங்க!

யு.எஃப்.ஓ/UFOs

 யு.எஃப்.ஓ என்றால் “அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள்” (Unidentified Flying Objects). இத்தகைய பொருள்களை?! பலர் பார்த்திருக்கிறார்கள் என்பது உண்மை. அதாவது, அப்பப்போ வானத்துல திடீர்னு எதாவது ஒன்னு பறக்கிற மாதிரி தெரியும் (ஏரோப்ளேன் இல்லீங்க!), அது விண்கற்களா/ஏவுகனைகளா அப்படின்னு அடையாளம் சொல்ல முடியாது. அதேசமயம், இது வேற்றுகிரக மனுஷனோட வேலையா கூட இருக்கலாம் அப்படிங்கிறது இன்னொரு விஷயம்! என்னதான் கூர்மையா கவனிச்சி ஆய்வு பண்ணாலும் இது என்னன்னே தெரியாமதான் இருக்கோம் இதுவரைக்கும்?!

தேஜா வு (Deja vu)

“தேஜா வு”, அப்படின்னா ப்ரெஞ்சு மொழியில “மூன்கூட்டியே பார்த்தது” அப்படின்னு அர்த்தமாம். அதாவது,  இதுவரைக்கும் போகாத ஒரு இடத்துக்க போய்ட்டு வந்த மாதிரி ஒரு உணர்வைத்தான் இப்படி சொல்றாங்க! உதாரணத்துக்கு, ஒரு பெண்மணி புதுசா ஒரு வெளிநாட்டுக்கு முதல் முதல்ல வந்து, ஒரு கட்டிடத்துக்குள்ள அடியெடுத்து வைக்கிறாங்க. ஆனா அங்க, அவங்க வாழ்க்கையில முதல்முதல்ல பார்க்கிறதெல்லாமே முன்னாடியே அவங்க பார்த்து அனுபவிச்ச மாதிரி ஒரு உணர்வு வருது அவங்களுக்கு! இதுதான் “தேஜா வு” அப்படிங்கிறாங்க!” சில விஞ்ஞானிகள் கூற்றுப்படி, தேஜா வு-வுக்கு காரணம் முன் ஜென்ம நினைவுகள் அப்படின்னு சொன்னாலும், இதுவரைக்கும் இந்த உளவியல் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒரு மர்மமாவேதான் இருக்கு!
இதுவரைக்கும் நாம பார்த்த விஷயங்கள் சில “கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி” இருந்திருக்கும் உங்களுக்கு. எனக்கும்தாங்க! ஆனா இப்போ நாம பார்க்க போற விஷயம்,  நம்ம எல்லோருக்கும் ஏதோ ஒரு வயசில அனுபவப்பட்டதா/கேள்விப்பட்டதா இருக்கும்னு நான் நெனைக்கிறேன். என்னன்னு யூகிக்க முடியுதா உங்களால……?!

பேய்/பிசாசு/ஆவி

 நம்ம பாரம்பரியத்துல, கலாச்சாரத்துல ஊறிப்போன ஒரு விஷயம்தான் இந்த பேய், பிசாசு, ஆவி எல்லாம். கண்டிப்பா நாம எல்லாரும் அப்பா/அம்மா, பாட்டி/தாத்தா இப்படி நம்ம குடும்பத்தச் சேர்ந்த ஒருத்தர் சொல்லக் கேட்ட ஒரு பேய் கதை கண்டிப்பா இருக்கும்.  எனக்கு நியாபகம் இருக்கிற வரைக்கும் சொல்லனும்னா, நான் அதிகமா கேட்டது/சினிமாவுல பார்த்தது “வெள்ளையா ஒரு புடவ கட்டிகிட்டு, ஜல் ஜல்னு கொலுசு சத்தம் கேட்கிற மாதிரி நடந்து வர்ர ஒரு பொம்பள பேய பத்தித்தாங்க! அதுக்காக, நான் நெசமாவே அப்படி ஒரு பேயைப் பார்த்தேன்னு எல்லாம் உங்க கிட்ட கப்சா உடறதுக்கு எனக்கு விருப்பமில்லீங்கோ!  சரி, நாம மேட்டருக்கு வருவோம். அதாவது, நான் மேல சொன்ன மாதிரி உலகத்தோட எல்லா மூலைகள்ல இருந்தும் இந்த மாதிரி கதைகள் நெறைய சொல்லப்பட்டாலும், சில புகைப்படங்கள் கூட எடுக்கப்பட்டு இருந்தாலும், இதுவரைக்கும் யாரும் “பேய்” அப்படின்னு ஒன்னு இருக்குன்னு ஆதாரப்பூர்வமா நிரூபிக்கவேயில்லீங்க சாமி! அது  ஒரு அழகிய?! மர்மமாவேதான் இருக்கு!

மர்மமாக மறையும் மனிதர்கள் 
(Mysterious Disappearances)

பொதுவா மனுஷங்க தொலைஞ்சு போறதும், கொஞ்ச காலம் கழிச்சு திரும்ப கிடைப்பதும்/விபத்தில் இறந்து போவதும் உலகத்துல சாதாரணமா நடக்கிற ஒன்னு!  ஆனா இப்போ நாம பார்க்க போற விஷயம் அப்படியில்ல. நெசமாவே,  நம்ம கூட இருந்துக்கிட்டிருக்கிற ஒருத்தரு திடீர்னு மறைஞ்சு போறது எப்படி சாத்தியம்? அது எப்படின்னு தெரியாது, ஆனா இது மாதிரி நெறைய நடக்குது (குறைந்தது அமெரிக்காவுலயாவது!). தொலைஞ்சு போனவங்க கெடைச்சிட்டா பரவாயில்ல, ஆதாரம் எதுவுமே இல்லாம, தொலைஞ்சு போறவங்கள பத்தி விசாரனை பண்ணாலும் அவங்க கிடைக்கிறதில்ல அப்படிங்கிறப்ப, அது ஒரு மர்மம்தானே?

ஆறாவது அறிவு/இன்டியூஷன் (Intuition)

நம்ம எல்லாருக்குமே “உள்ளுணர்வு” அப்படின்னு ஒன்னு இருக்குங்கறத நீங்க யாரும் மறுக்க மாட்டீங்கன்னு நெனக்கிறேன்.  அது ஆறாவது அறிவோ இல்ல வெறும் உள்ளுணர்வோ, எதாவது ஒரு தருணத்துல நாம எல்லாரும் அத உணர்ந்திருப்போம்தானே? அந்த மாதிரி உள்ளுணர்வுகள் சில நேரங்களில் பொய்த்துப் போனாலும், பெரும்பாலான நேரங்களில் உண்மையாவதை உணர்ந்து/கேள்விப்பட்டிருப்போம். உதாரணத்துக்கு, ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போவுது அப்படின்னு நாம  நெனச்சி முடிக்கிறதுக்குள்ள நம்ம குழந்தை கீழே விழுந்து அடிபட்டுடும்/ஒரு  விபத்து நடந்திடும் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். இது எல்லாத்துக்கும் காரணம், நம்ம ஆழ்மனசுல  நம்ம சுத்தி நடக்கிற விஷயங்கள் பதிஞ்சுபோய், அதுல இருந்து நமக்கே தெரியாம நாம, இப்படி நடக்கப்போவுது அப்படின்னு உணர்கிறோம். அது நமக்கு “எப்படி”, தெரியுது, “ஏன்” உணர்றோம் அப்படிங்கிற கேள்விகெல்லாம் இன்னும் பதில் தெரியல!

மனிதன் போன்ற மிருகம்/Bigfoot

 பல வருஷ காலமா அமெரிக்காவுல, பெரிய, அடர்த்தியான முடியோட, மனுஷன்மாதிரியே இருக்கிற “பிக்ஃபூட்”, அப்படிங்கிற மிருகத்தப் பார்த்ததா  நெறைய பேர் சொல்லியிருக்காங்க!  அப்படி அந்த மாதிரி மிருகங்கள் இருந்து, இனப்பெருக்கம் செஞ்சுகிட்டிருந்தா குறைந்தது ஒன்னையாவது, இல்லன்னா அதோட ஒரு பிணத்தையாவது கண்டுபிடிச்சிருக்கனுமில்ல இதுவரைக்கும்?!  ஆனா அப்படி ஒன்னையும்  இதுவரைக்கும் கண்டும் புடிக்கல, வேட்டையாடவும் இல்லங்கறதுதான் உண்மை!  வெறும், கண்ணால் கண்ட சாட்சி, புரியாத போட்டோ மட்டும் வச்சுகிட்டு அந்த மாதிரி ஒரு மிருகம் இருக்குன்னு சொல்றதுல எந்த யதார்த்தமும் இல்ல அப்படின்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்! இதே மாதிரி, நம்மூர்ல ஒரு குறங்கு மனிதன்?! கோயம்பத்தூரைச் சுற்றியுள்ள காடுகள்ல?! இருக்கிறதா, ஆனந்த விகடன்ல ஒரு கட்டுரை படிச்சதா எனக்கு ஒரு நியாயபகம்?! உங்களுக்கு யாருக்காவது நினைவிருக்கிறதா? இருந்தா கொஞ்சம் சொல்லுங்க!

டாவோஸின் முனுமுனுக்கும் பாடல் (The Taos Hum)

அமெரிக்காவுல, நியூ மெக்சிகோவுல இருக்கிற ஒரு சின்ன நகரத்துக்கு பேருதான் டாவோஸ் (Taos). இந்த நகரத்தச் சேர்ந்த சில மக்கள் பல வருஷமா, யாரோ ஒருத்தர் ஏதோ ஒரு பாடலை முனுமுனுக்கிற மாதிரியே தூரத்துல ஒரு சத்தம் கேட்டுகிட்டு இருக்கிறதா சொல்லிக்கிட்டு இருக்காங்க! ஆனா வெறும் 2 விழுக்காடு மக்கள்தான் இதச் சொல்றாங்களே தவிர, மத்தவங்கள்லாம் இது ஏதோ ஒலி அலைகள்னால ஏற்படற ஒரு சத்தம்தானே தவிர, வித்தியாசமான முனுமுனுப்பு எல்லாம் 

இல்லங்கிறாங்களாம். எது எப்படியோ, அது என்ன சத்தம்னு இதுவரைக்கும் யாராலயும் உறுதியாச் சொல்லமுடியலயாம்!
எழுதின எனக்கே ஒரு மர்மதேசம் போய்ட்டு வந்த மாதிரி இருக்குதுன்னா…..அதாங்க, வின்னர் வடிவேலு மாதிரி, “அடிச்ச கைப்புள்ளைக்கே இந்த கதின்னா….அடிவாங்குனவன் கதி என்னவோ”?!, இப்படி பதிவப் படிச்ச உங்களுக்கு எப்படி இருக்குன்னு கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க!




2 comments:

  1. They are very good information.but it contains more than a limit.so you will prepare only few things .it is good reading

    ReplyDelete
  2. This content was very lower limit in blogger rules

    ReplyDelete