Wednesday 27 June 2018

மனித மூளை பற்றிய அரிய தகவல்கள்



மனித மூளை ஒரு அதிசயம்


       இந்த கட்டுரையின் மூலம் மனித மூளை எவ்வாறு நினைவுகளை சேகரித்து வைக்கிறது என்பதை அறிந்துகொள்வோம்.இது ஞாபக மறதியை அவிழ்க்க உதவும் என்று நினைக்கிறேன்..


மூளை நாம் பார்க்கும், கேட்கும்,உணரும் செயல்களை  மூன்று நிகழ்வுகள் மூலம் சேமித்து கொள்கிறது.அவைகள்,


பதியவைத்தல்:


இதுவே நிகழ்வுகளை நமது நினைவகத்தில் சேமித்தலில்  முதல் செயல் ஆகும்.அதாவது, நமது புலங்களான கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல் ஆகியவை நமது சுற்றுபுரத்திலிருந்து தகவல்களை சேகரித்து மூளைக்கு அனுப்புகின்றன.உ.ம்: நமது கண் ஒரு நபரை முதல் முறையாக காணும் பொழுது அவரின் நிறம்,உருவம் ,உயரம் போன்ற தகல்வல்களை   மூளைக்கு அனுப்பும்.இந்த தகவல்கள் நமது மூலையில் நியூரோன்கள் (neurons) எனும் நரம்பு செல்கள் வழியாக கடத்தப்படும்.இந்த தகவல்கள் ஒரு நரம்பு செல்லில் (neuron) இருந்து மற்றொரு நரம்பு செல் வழியாக பாயும்.அதாவது இரு செல்ளின் இடைவெளியை கடக்கும் பொழுது ஒரு வகை வேதியல்  (neurotransmitor) மூலக்கூறு வெளிபட்டு இரு நரம்பு செல்களிடையே ஒரு இணைப்பை ஏற்படுதும்.இந்த இணைப்பிற்கு சினப்சே(synapse) என்று பெயர். இந்த இணைப்பு உறுதியாகும் பொழுது அந்த நபரை பற்றிய நினைவு உங்கள் மூளையிலிருந்து அகலாது.இந்த இணைப்பு உறுதியாவது ஒரு முறை பார்த்தவுடன் நிகழ்ந்துவிடாது.ஒருநபரை  மீண்டும் மீண்டும் பார்க்கும் பொழுது அவரை பற்றிய தகவல் நம் நரம்பு செல்களில் உறுதியான இணைப்பாக (synapse) ஆகப் பதிய வைக்கபடும். இந்த இணைப்பு எந்த அளவுக்கு உறுதி ஆகிறதோ அந்த அளவுக்கு அந்த நபரை பற்றிய நினைவையும் நாம் மறக்காமல் இருப்போம்.


இது அனைத்து விதமான நினைவுகளுக்கும் பொருந்தும். ஒவ்வொரு நினவுகளுக்கும் ஒரு தனி இணைப்பு(synapse) நம் மூளையில் உருவாகும்.இவ்வாறு தான் நாம் படிக்கும் பாடம் , கேட்கும் விஷயம், பார்க்கும் படம் அனைத்துமே நம் மூலையில் பதிய வைக்க மீண்டும் மீண்டும் படிப்பதன் மூலம் நாம் படித்த பாடமானது ஒரு உறுதியான நரம்பு செல் இணைப்பாக மாறி மறக்காமல் இருக்கிறது



 நினைவுகளின் வகைகள்:


இவை மூன்று வகைபடும் ,


1.சென்சாரி


2.ஷார்ட் டைம் மெமோரி


3. லாங் டைம் .


சென்சாரி நினைவுகள் மிக சொற்ப வினாடிகளே நினைவில் இருக்கும்.உ.ம். நாம் முதல் முறை கேட்கும்  ஒருவரின் குரல் நமக்கு நினைவில் தங்காது.


ஷார்ட் டைம் மெமோரி எனும் இரண்டாம் வகை நினைவுகள் 30 வினாடிகள் வரை நினவில் இருக்கும். உ.ம். ஒருவரின் தொலைபேசி என்னை முதல் முறை கேட்கும் போது அந்த எண் உடனேயே எழுதி வைக்காவிடில் மறந்துவிடும்.


லாங் டெர்ம் மெமோரி எனும் நீண்ட கால நினைவுகள் நம் மூளை நன்றாக செயல் படும் வரை நமக்கு மறக்காது.அகற்கு நாம் செய்ய வேண்டிய ஒன்று அந்த நிகழ்வுகளை நமக்குள் நினைவுபடித்திக்  கொண்டே இருப்பது.உம்..உங்களில் பலருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வந்து அந்த முதல் காதல் இன்னும் நினைவிருக்கும். இகற்கு காரணம் நீங்கள் ஒவொரு முறை உங்கள் காதலி பற்றி நினைக்கும் போதும் உங்கள் மூளையில் காதல்  பற்றிய இணைப்பு(synapse) உறுதி ஆகும்.     நீங்கள் ஏதாவது ஒரு நினைவை பற்றி நினைவு கூறாத போதும், நினைக்காத போதும் உங்கள் மூளையில் அந்த விஷயத்திர்கான பிரேத்யேக இணைப்பு விடுபடத் தொடங்கும்.இதனால் தான் மறதி ஏற்படுகிறது.


தகவல்களை நினைவுகூறுதல் :


நாம் ஒரு தகவலை நம் மூளையிலிருந்து நினைவுகூறும் போது அந்த தகவலானது இந்த synapse எனும் நரம்பு செல்களின் இணைப்பு வழியாக தான் ஞாபக்திற்கு திரும்பி நினைவுகூறுகிறோம். நான் முன்பே கூறியதை போல இந்த இணைப்பு விடுபடும் பொது ஞாபகபடுத்துதல் சிரமமாகும்.இதுவே மறதியின் காரணம்.


இந்த மறதியை தவிர்க்க நாம் மூளையில் சேகரிக்கும் தகவல்களை ஆழமாக பதிய வைக்க வேண்டும். அதாவது பாடம் கேட்கும் பொது அதை கவனமாக கேட்டு மூளையில் பதிய வைக்க வேண்டும்.   மேலும் அந்த தகவல்களை நமக்குள் சொல்லி பார்த்து கொள்வதால் அந்த தகவலுக்கான இணைப்பு நம் நரம்பு செல்களில் உறுதியாகி நமக்கு எளிதில் ஞாபகத்தில் இருக்கும்.


முதுமையும் மறதியும்:


மனித மூளையானது சுமாராக 100 பில்லியன்(100 * 100 கோடி) நரம்பு செல்களை (நியூரான்ஸ்)  கொண்டது. நமக்கு 3 வயது ஆகும்போது தான் அந்த செல்கள் முழு வளர்ச்சி அடையும்.இதனால் தான் நமக்கு 3 வயதிற்கு முந்தய ஞாபகங்களை நினைவு படுத்த முடியவில்லை.3 வயதில் தான் நாம் அதிக எண்ணிகயிலான நரம்பு செல்களை கொண்டிருக்கிறோம். 3 வயது குழந்தைக்கு நாற்பது மொழிகள் கற்றுக்கொள்ளும் திறன் இருப்பதாக நான் கேள்வி பட்டு இருக்கிறேன்.இதுவே அதற்கு காரணம். நாம் இருபது வயதுகளை கடக்கும் பொது நமது மூளையில் உள்ள  இந்த நரம்பு செல்கள் குறைய தொடங்கி நாம் என்பது வயதை எட்டும் போதூ சுமாராக இருபது சதவீத நரம்பு செல்களை இழந்திருபோம்.மரதிக்கு இது ஒரு காரணம் என்று கூறலாம்.


இருப்பினும் நாம் மீதமுள்ள நரம்பு செல்களை கூட நமது வாழ்நாளில்  முழுவதுமாக பயன்படுத்துவது இல்லை.இந்த இருபது சதவீத செல்களின் இழப்பு ஒரு குறை ஆகாது. நம்மில் பலர் முதுமை வந்த பிறகு நமது நடவடிக்கைகளை குறைத்து கொள்கிறோம்.நமது சிந்தனையையும் குறைத்து கொள்கிறோம்.இதனால் நாம் நினைவு கூறாத விஷயங்களுக்கு உரிய இணைப்புகள் நம் மூளை செல்களில் விடுபடுகின்றன. இதுவே மரதிக்கு முக்கிய காரணம். நாம் முதுமையிலும் நம் மூளைக்கு சவாலான செயல்களை கொடுத்து கொண்டே இருந்தால் நம் மூளை முதுமையிலும் இளைமயாக செயல்படும்.


    மூளை பற்றிய சில தகவல்கள்…



“நாம் சாதாரணமாக 10 சதவீத மூளையைத்தான் பயன்படுத்துகிறோம். 100 சதவீதம் பயன்படுத்தினால், விஞ்ஞானி ஐன்ஸ்டீன் போல் இருப்போம்’’ என்று அடிக்கடி கூறப்படுகிறது. ஆனால், அந்தத் தகவல் சரியல்ல. உண்மையில் நமது உடலில் நூறு சதவீதம் வேலை செய்யும் உறுப்பு மூளைதான். ருசி, வாசனை, தொடுதலை அறிதல், சிந்தித்தல், பேசுதல் என நம் மூளை ஓயாது எந்நேரமும் வேலை செய்துகொண்டே இருக்கிறது. மூளை பற்றிய சில தகவல்கள்…


* வளர்ந்த மனிதனின் மூளை எடை 1.5 கிலோகிராம்.


* ஒவ்வொரு நொடியும் நமது மூளைக்குள் 1 லட்சம் அமில மாற்றங்கள் நமக்குத் தெரியாமலே நடக்கின்றன.


* நமது மூளையில் உள்ள ரத்த நாளங்களை விரித்து நீட்டினால், 1 லட்சத்து 60 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு அவை நீளுமாம்.


* மூளையில் 3 வயதில் தான் மிக அதிக செல்கள் அமைகின்றன. பிறகு அவை குறைய ஆரம்பித்து விடுகின்றன.


* வாழ்க்கையில் மூளை, குவாட்ரிலியன்… அதா வது, 10 கோடியே கோடி தகவல்களை தனித்தனியாக தனக்குள் தக்க வைத்துக் கொள்கிறது!


* 18 வயதில் மனிதனின் மூளை வளர்வதை நிறுத்திக் கொள்கிறது.


* நம் மூளை செயல்படும்போது 10 முதல் 23 வாட் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.


* மனித உடலில் உள்ள ரத்தத்திலும் ஆக்சிஜனிலும் 20 சதவீதத்தை மூளைதான் பயன்படுத்துகிறது.


* மனித மூளை மணிக்கு 431 கி.மீ வேகத்தில் செயல்படக் கூடியது.


* வலியை அறியும்போது ஆணின் மூளை வேறு மாதிரியும் பெண்ணின் மூளை வேறு மாதிரியும் செயல்படுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


* பெண்களுக்கான சிறப்பு ஹார்மோனாக அறியப்படும் ஈஸ்ட்ரொஜன் நினைவுத் திறனை வளர்க்கக் கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால்தான் பெண்கள் அதிக ஞாபகசக்தியோடு இருக்கிறார்கள் போலும்.


* மனிதர்கள் எல்லோருக்குமே கனவுகள் வரும். சிலர் அதை மறந்துவிட்டு, ‘கனவு காணுவதில்லை’ என்று சொல்வதுண்டு. உண்மையில் கனவுதான் மூளையின் உடற்பயிற்சி. நாம் விழிப்புடன் இருப்பதை விட கனவு காணும்போதுதான் மூளை அதிக செயல் திறனுடன் இருக்கிறதாம்.


* நாம் சிரிக்கும்போது நம் மூளையின் வெவ்வேறு ஐந்து பகுதிகளில் பலமான தாக்கம் ஏற்படுகிறது. மூளைக்கு அது கடும் வேலைதான்.


* இடது கை பழக்கம் கொண்டவர்களின் மூளையில் கார்பஸ் கொலாசம் என்ற பகுதி வலது கை பழக்கம் கொண்டவர்களை விட 11 சதவீதம் பெரிதாக இருக்கிறது.


* சமீபத்திய ஆராய்ச்சிப்படி மூளை கசக்கிப் பிழியப்படும் டாப் 3 டென்ஷன் வேலைகள்…

1. அக்கவுன்டன்ட்
2. நூலகர்
3. டிரக் டிரைவர்

மூளை எடை

* பிறந்த குழந்தை 350-400 கிராம்
* யானை 4783 கிராம்
* பசு 425-458 கிராம்

    

2 comments:

  1. பின்னணிக் கலரை எடுத்து விட்டால் படிப்பது இன்னும் எளிதாகும்.

    ReplyDelete