Sunday 31 May 2020

PUBGன் வெற்றிக் கதை(The Success Story of PUBG-The Decades Best Battle Royale game)

PUBGன் வெற்றிக் கதை - தசாப்தத்தின் மிகவும் பிரபலமான போர் ராயல் விளையாட்டு



 சமீபத்திய ஆண்டுகளில் பிரபலமான “Battle Royale” வகையின் மகத்தான வளர்ச்சியைக் கண்டது, மேலும் PUBG என அழைக்கப்படும் Playerunknown இன் போர்க்களங்களை விட எந்த விளையாட்டுகளும் முக்கியத்துவம் பெறவில்லை.  இது இப்போது எல்லோருக்கும் தெரிந்திருக்கலாம்.  100 வீரர்கள் ஒரு விமானத்திற்குள் நுழைகிறார்கள், ஒரு பாராசூட் உதவியுடன் ஒரு தீவில் இறங்குகிறார்கள்.  துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் பொருள்களை உயிர்வாழ்வதற்கான ஒரே நோக்கத்தோடு, எதிரிகளைக் கொல்வதற்கான சோதனையுடன், விளையாட்டு தொடங்குகிறது.  மேலும், சண்டை தொடங்குகிறது.  ஒப்பிடக்கூடிய சூழ்நிலைகளில், ஒருவர் எவ்வாறு செயல்படுவார் என்பதைப் பற்றி நீங்கள் நினைக்கும் போது இது மக்களுக்கு சுவாரஸ்யமானது. விளையாட்டானது உலக வரைபடத்தின் போர் முறையை வைத்தது.  ஆனால், அது எப்படி வெற்றிகரமாக ஆனது?  வெற்றிக் கதையை அறிவோம்.

 PUBG க்குப் பின்னால் இருப்பவர் பிரெண்டன் கிரீன்.  அவர் அயர்லாந்தில் பிறந்தார், ஆனால் புகைப்படக் கலைஞராகவும் வலை உருவாக்குநராகவும் பணியாற்ற பிரேசில் சென்றார்.  தென் அமெரிக்க தேசத்தில் அவருக்கு கிடைத்த வாய்ப்பின் மத்தியில், அவர் தனது அன்பைக் கண்டுபிடித்து திருமணம் செய்து கொண்டார்.  இருப்பினும் அது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முடிவடைந்தது, அவர் அயர்லாந்துக்குத் திரும்பினார்.  விளையாட்டு வளர்ச்சியில் தனது சொந்த வழியை உருவாக்கத் தொடங்கினார். 
 
     கிளாசிக் விளையாட்டு 
        *Arma 2 
        *DayZ
         
போன்ற கேம்கள் Battle Royale  என மாற்றியமைத்த நேரம் இது, இது மகத்தான வெற்றியாக மாறியது.  கிரீனுக்காக கண்கள் திறக்கப்பட்டன, விளையாட்டு மேம்பாட்டு அமைப்பு டேபிரேக்(DayBreak) அவரை வேலைக்கு அமர்த்தியது.  ஆனால் அவர் விரைவில் அந்த அமைப்பை விட்டு வெளியேறினார்.

 பல மாதங்கள் கழித்து, அவர் சியோலுக்கு ஒரு விமானத்தில் அமர்ந்தார்.  தென் கொரிய புளூஹோலின்(Blue hole Corporation) பின்னால் உள்ள மனங்கள் கிரீன் கருத்துக்கள் மற்றும் போர் ராயல்(Battle Royale) விளையாட்டுகளைப் பற்றிய எண்ணங்களால் ஈர்க்கப்பட்டன.  ப்ளூஹோல் அவரை படைப்பாக்க இயக்குநராக விரும்பினார் மற்றும் PUBG அடிவானத்தில் இருந்தார்.  2016 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், அவர்கள் ஒரு வருடத்தில் அதை வெளியிடுவதற்கான ஆர்வத்துடன் விளையாட்டை உருவாக்கத் தொடங்கினர்.  மார்ச் 23, 2017 அன்று, ப்ளுஹோல்(Blue Hole) ஆரம்ப அணுகல் வெளியீடு வந்த நேரம் இது, சில பிழைகளை பொருட்படுத்தாமல் உடனடியாக வெற்றியாக மாறியது.  ஆனால் டெவலப்பர்கள் பிழைகளை சமாளிக்கும் மனநிலையில் இல்லை.  அவர்கள் தங்கள் விளையாட்டு சோதனையில் கவனம் செலுத்தினர்.  அவர்கள் தங்கள் பீட்டா(Beta) நகல்களை பல விளையாட்டு சோதனை நிறுவனங்களுக்கு, கடுமையான சோதனைக்காக அவுட்சோர்ஸ்(Outsourcing) செய்து கருத்துக்களை வழங்குகினார்கள்.

 ஒரு வருடத்திற்குள், பிசி(PC) மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஒன்(Xbox One) மூலம் இந்த விளையாட்டு உலகளவில் 50 மில்லியன் பிரதிகள் விற்றது.  Blue holeன் மிக முக்கியமான விளையாட்டுகளின் பட்டியலில், டோட்டா 2(Dotta 2) மற்றும் கவுண்டர் ஸ்ட்ரைக்: குளோபல் ஆப்சென்சிவ்(Counter Strike:Global Offensive) போன்ற விளையாட்டுகளுக்கு முன்பு, PUBG இன்னும் மேலே உள்ளது.  இருப்பினும்,   அவர்கள் விளையாட்டை மென்மையாக்க வேண்டும், பல்வேறு தளங்களில் இணக்கமாக இருக்க வேண்டும் மற்றும் மிக முக்கியமாக ஒரு முழுமையான விளையாட்டு சோதனை செயல்முறையை செயல்படுத்த வேண்டும்.  ஏனெனில், ஒரு விளையாட்டில் விளையாட்டு சோதனையின் முக்கியத்துவத்தை அவர்கள் அறிந்திருந்தனர்.  இது டெவலப்பர்களை பிழைகள் கண்காணிக்க அனுமதிப்பது மட்டுமல்லாமல் பொதுவான மதிப்பாய்வு மற்றும் விளையாட்டு அனுபவத்தையும் பெறுகிறது.

 போர்க்களங்கள்(Battle Royale) விளையாட்டில் நாடகத்தையும் உற்சாகத்தையும் தருகின்றன.  எந்தவொரு ஸ்ட்ரீமர்களின் தனிப்பட்ட திறன் மட்டத்தைப் பொருட்படுத்தாமல், விளையாட்டைப் பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமானது.  ஒவ்வொரு விளையாட்டிலும், நீங்கள் வலுவான உணர்ச்சிகரமான தருணங்களை கடந்து செல்கிறீர்கள்: ஒரு AWM ஐக் கண்டுபிடிப்பதில் மகிழ்ச்சி, அடிச்சுவடுகளாக நரம்புகள் வீட்டிற்குள் ஊர்ந்து செல்கின்றன, அல்லது வெற்றிகரமான போருக்குப் பிறகு நிவாரணம்.  இறுதியில், இது வெற்றி அல்லது தோல்வி பற்றிய பார்வையாளர் விளையாட்டு அல்ல, ஆனால் தொடர்ச்சியான கதை சோதனைகள், அவற்றில் பெரும்பாலானவை புல்லட்(Bullet) அல்லது குறுக்கு வில்லுடன்(CrossBow) முடிவடைகின்றன

Saturday 30 May 2020

பெண்கள் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டிய தற்காப்பு கலைகள்(Women's Must learn the Defensives)


பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கண்கூடாக பார்த்து வருகிறோம். சமீப காலமாக பெண் குழந்தைகள் இந்த கொடுமைகளுக்கு ஆளாவது அதிகரித்து வருகின்றது. பாலியல் கல்வி, பாலின சமத்துவம் குறித்த உரையாடல் எவ்வளவு முக்கியமோ அதேபோல பெண்கள் தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்வதும் காலத்தின் தேவையாகிறது. பெண்கள் கற்றுக் கொள்வதற்கு பொருத்தமான தற்காப்பு கலைகளை அறிமுகப்படுத்துவது தற்போதைய காலகட்டத்தில் அவசியமாகிறது.


1. கிராவ் மகா


இந்த தற்காப்பு கலை இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் உருவாக்கப்பட்டது. இது, ஐகிட்டோ, ஜூடோ, பாக்ஸிங், ரெஸ்லிங் போன்ற கலைகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. உண்மையாகவே தெருவில் ஒரு சண்டையிட வேண்டிய சூழல் வந்தால் எவ்வாறு திறமையாக செயல்படலாம் என்பதற்காகவே உருவாக்கப்பட்ட ரியலிஸ்டிக் சண்டை கலை, கிராவ் மகா. இந்த கலையில் பெண்களுக்கு சாதகமான அம்சம் என்று சொன்னால், சண்டையின்போது எந்த நிலையில் இருந்து எதிரியை தாக்க வேண்டும் என்பதை விட, தவறான நிலையில் இருந்து எதிரியிடம் அகப்பட்டுவிடாமல் இருக்க வேண்டும் என்பதே. மேலும் இந்தக் கலையில், சுற்றியுள்ள பொருட்களை அவதானித்து அவற்றைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தக் கற்றுத் தரப்படுகிறது. எதிரி பலமான ஆயுதம் வைத்திருந்தாலோ, ஒன்றுக்கு மேற்பட்ட எதிரிகள் இருந்தாலோ கன நேரத்தில் முடிவெடுக்கும் ஆற்றலையும் இந்தக் கலை வளர்க்கிறது.


2. ஜூடோ


ஜூடோ என்பதற்கு முறையான வழி என்று பெயர். உடல், புத்தி ஆகியவற்றை ஒருமுகப்படுத்தி எதிரியை வீழ்த்துதல், இதன் வழிமுறை. இந்தக் கலையை முறையாக கற்பதன் மூலம், எதிரியை தனது இயல்பான பலத்தைக் கொண்டே தூக்கி எறியவும், தரையில் வீழ்த்தவும் முடியும். 19 ஆம் நூற்றாண்டில் இறுதியில் ஜப்பானில் தோன்றிய இந்தக் கலை, 1964 ஆம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டிகளின் ஆண்கள் பிரிவிலும், 1992 ஆம் ஆண்டு முதல் பெண்கள் பிரிவிலும் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுக்க பிரபலமடைந்துள்ள இந்தக் கலையை சென்னையிலும் கற்றுக்கொள்ளலாம். பெண்களுக்கு எதிர்பாராத நேரத்தில்தான் ஆபத்துகள் வருகின்றன. எதிர்பாராத நேரத்தில் நடக்கும் தாக்குதலின்போது எப்படி சுதாரிப்பது என்பதுதான் ஜூடோவின் முதல் பாடம். குறிப்பாக அடிபடாமல் கீழே விழ கற்றுக் கொடுக்கப்படுகிறது. கீழே விழும்போதே சுதாரிப்பவர்கள்தான் திரும்பத் தாக்க முடியும். ஜூடோவைப் பயன்படுத்தி ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை சமாளிப்பது கடினம்.


3. தாய் பாக்ஸிங்


முவா என்று அழைக்கப்படும் தாய் பாக்ஸிங் பெண்களுக்கு மிகச்சிறந்த தன்னம்பிக்கையையும், துணிச்சலையும் கொடுக்கும். உதைத்தல், முழங்காலில் தாக்குதல், முழங்கைகளைப் பயன்படுத்தி தாக்குதல், குத்துதல் ஆகியவைதான் முவா. இரண்டு முஷ்டிகள், இரண்டு முழங்கைகள், இரண்டு முழங்கால்கள், இரண்டு பாதங்கள் இவைதான் இந்த சண்டைக்கான மூலதனம். இந்த சண்டையைக் கற்றுக் கொள்ள எலும்புகள் வலுவோடு இருக்க வேண்டும். இந்த எட்டு எழும்புகளை வைத்து எவ்வளவு பலசாலியையும் நிலைகுலைச் செய்வதற்கான வழிமுறைகள் இந்தக் கலையில் உள்ளன. பெண்களிடம் தொல்லை கொடுப்பவர்கள் அருகில் நெருங்கி வந்துதான் சீண்டுவார்கள். அவ்வாறு செய்யும்போது எதிரி நிற்கின்ற இடத்தைப் பொறுத்து, தனது மூட்டுகளால் பலமாகத் தாக்கினால் அங்கேயே எதிரி வீழ்த்தப்படுவது உறுதி.


4. கராட்டே


ஜப்பானில் 14 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்த கலை, தற்போது உலகின் அனைத்து தேசங்களையும் சென்றடைந்துள்ளது. சுருக்கமாக கராட்டே இல்லாத நாடுகளே இல்லை எனலாம். தன்னை விட அதிக பலம் கொண்டவர்களை திறமையாக வீழ்த்துவதற்காக வடிவமைக்கப்பட்ட தற்காப்பு கலை வடிவம், கராட்டே. இது பெண்களுக்காகவே உருவாக்கப்பட்ட கலை இல்லை என்றாலும், இயல்பாகவே பருமனில், எலும்புகளின் உறுதியில் அதிகமாக இருக்கின்ற ஆண்களை எளிதாக வீழ்த்த இந்தக் கலை பயன்படுகிறது. கராட்டே கற்றுக் கொள்வதன் மூலம் பெண்களுக்கு தன்னம்பிக்கை, தன்மதிப்பு, தைரியம் கிடைக்கிறது. வாழ்வின் எந்தப் பிரச்னையின்போதும் பயந்து ஒதுங்காமல் துணிச்சலோடு எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் பிறக்கிறது.


5. டேக்வான்டோ


கைகளை விட கால் சுறுசுறுப்பாக இயங்குகிறதா, உங்களுக்கு சரியான தற்காப்பு கலை, டேக்வான்டோ. சீனாவின் பாரம்பரிய தற்காப்பு கலைகளையும், ஜப்பானில் உருவான கராட்டேவையும் உள்வாங்கி கொரியாவில் உருவான பிரமாதமான தற்காப்பு கலை, டேக்வான்டோ. தலையில் உதைத்தல், குதித்து உதைத்தல், சுழன்று உதைத்தல், பறந்து வந்து உதைத்தல் போன்ற வேகமான உதைக்கும் டெக்னிக்களை கொண்ட கலை இது. இதிலும், குத்துதல், கைகளால் தடுத்தல் போன்ற முறைகள் உள்ளன. ஆனாலும், டேக்வான்டோவில் உதைத்தலே பிரதானம். ஆண்கள், பெண்களை பயமின்றி சீண்டுவதற்கு காரணம், அவர்களால் எதுவும் செய்யமுடியாது; தடுக்க முடியாது என்பதுதான். அந்த நேரத்தில் டேக்வான்டோ தெரிந்த பெண்களாக இருந்தால், பயிற்சி பெற்ற அவர்களின் கால்கள், எதிரியின் முகத்தை கண் இமைக்கும் நேரத்தில் பதம் பார்த்துவிடும். கைகளைக் காட்டிலும், கால்கள் இயல்பாகவே பலமானது என்பதால் எவரையும் எளிதில் வீழ்த்தலாம்

Friday 29 May 2020

தஞ்சை பெரிய கோவில் பற்றிய தெரியாத உண்மைகள்(The Unknown Facts about Thanjai Pragadeeshwarar Temple)



தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள்


கட்டி முடித்து ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் கோவிலைப் பற்றி நமக்கு தெரியாத பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை அறிய பெரிய கோவிலை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து. அங்கிருக்கும் சிற்பங்களை கண்டறிந்து, சிற்பங்கள் தெளிவாக தெரியாமல் இருந்தால் அதை அழகாக வரைந்து, அதன் புராணத்தினை கண்டறிந்து மக்களுக்கு கல்லிலே கலைவண்ணம் கண்டோம் என்ற இணையதளம் சொல்லுகிறது. அங்கு சென்றால் போதும்.

விழுகின்ற நிழல் 


தஞ்சை கோவிலைப் பற்றிய பல உண்மைகளோடு, சில பொய்களும் கலந்திருக்கின்றன. அதுவும் எது உண்மை என காலம்காலமாக நம்பும் அளவிற்கு. கோபுரத்தின் நிழல் கீழே விழாது என்று நானும் நம்பிக்கொண்டிருந்தேன். நீங்களும் நம்பிக்கொண்டிருந்தால் அதனை மாற்றிக் கொள்ளுங்கள். அது பொய் என்று படம் பிடித்து விளக்கியிருக்கின்றார்கள். 

யாளி வீரர்கள்




இந்த யாளியில் வீரர்கள் படையெடுத்து செல்வதை பார்த்தீர்களா. இதைப் போன்ற ஏகப்பட்ட வீரர்கள் தங்கள் யாளியுடன் கிளம்பிச் செல்கிறார்கள். இவர்களை தஞ்சைக் கோவிலில் பார்த்திருக்கின்றீர்களா?. இல்லையா ?. இத்தனை யாளிகள் எப்படி உங்கள் கண்களிலிருந்து தப்பின?. தெரிந்து கொள்ள ஆசையா அடுத்த சிற்பத்தினை பாருங்கள். ஒரு பேனா மூடியை வைத்து அந்த சிற்பம் எத்தனை சிறியதாக இருக்கிறதென சொல்லியிருக்கின்றார்கள். பெரிய கோவிலில் இத்தனை சிறிய சிற்பங்கள் கண்களில் படுபவது ஆச்சிரியமானதுதானே. 

மோனோலிசாவை மிஞ்சும் சிவன் 

டாவின்சியின் மோனோலிசாவை எத்தனை உச்சத்தில் வைத்துப் போற்றுகிறோம் நாம். அவள் சோகமாக இருக்கிறாள், அதே சமயம் மர்மப் புன்னகையையும் வீசுகிறாள் என்று அவளின் அழகை போற்றுகிறோம். ஆனால் இங்கே நம் தஞ்சையில் அப்படி ஒரு சிற்பம் இருப்பதை நாம் அறியாமல் இருக்கிறோம் என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா. உண்மைதான். இந்த சிற்பத்தில் கோபம் இருப்பதை போன்று அன்பான பக்கமும் இருக்கிறது. 
பெரிய நந்தி??


கோவிலின் முன்னால் இருக்கும் நந்தி வளர்ந்து கொண்டே இருந்தது. அதன் பிறகு அதன் தலையில் ஆணி அடித்து அது வளர்வதை தடுத்து நிறுத்தினார்கள் என்று சிறுவயதில் கதை கேட்டிருப்போம். நாமக்கல் ஆஞ்சிநேயர் சிலைக்கு கூட இதுபோல ஒரு கதை உண்டு. மிகப்பெரிய நந்தியை சிற்பமாக வடித்திருப்பதை நம்ப இயலாமல் சுவாரசியத்திற்காக சொன்ன கதைகள் இவை. ஆனால் உண்மையில் இந்த நந்தி சிற்பம் கோபுரத்தில் உள்ளது. அது எத்தனை உயரமானது என்பதை அழகாக மனிதனை வைத்து நமக்கு காட்டியிருக்கின்றார்கள். 

துவாரபாலகர்கள் 



சரி, குட்டி குட்டி சிற்பங்களையெல்லாம் கண்டு கொள்வது கஸ்டம் தான். ஆனால் ஒரு யானை அளவிற்கு பெரிய சிற்பங்களையே நாம் கோட்டை விட்டிருக்கிறோம் தெரியுமா. பொதுவாக சிற்பத்தின் அளவை நமக்கு காட்ட அவர்கள் பேனாவின் மூடியை, கைப்பேசியை அருகே வைத்து புகைப்படம் எடுப்பது வழக்கம். இந்த சிற்பத்தின் பிரம்மாண்டத்தினைக் காட்ட யானையை உபயோகப்படுத்தியிருக்கின்றார்கள். 

Thursday 28 May 2020

நமக்கு தெரியாத சுவாரசியமான சில உண்மைகள் விமானத்தைப் பற்றி(The unknown interesting facts about Flight)


விமானத் துறையில் பொதிந்து கிடக்கும் சுவாரஸ்யங்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் அவ்வப்போது வெளிக்கொணர்ந்து வாசகர்களுடன் பகிர்ந்து வருகிறது. அந்த விதத்தில், விமானத் துறை பற்றிய சுவாரஸ்யங்களை இந்த செய்தியில் காணலாம்.

1903ம் ஆண்டு ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானமானது 120 அடி தூரம் பயணித்தது.

ஆனால், தற்போது வணிக ரீதியில் பயன்படுத்தப்படும் போயிங் 777 உள்ளிட்ட விமானங்கள் ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பினால் அதிகபட்சமாக 15,844 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் படைத்தது.

சர்வதேச அளவில் ஆங்கிலம்தான் விமானப் போக்குவரத்துத் துறையின் பொதுவான மொழியாக பேசப்படுகிறது. பைலட்டுகள், விமானங்களை கட்டுப்படுத்தும் பணியாளர்களுக்கு ஆங்கில புலமை என்பது அடிப்படைத் தகுதிகளில் ஒன்று.

விமானக் கட்டுப்பாட்டு கோபுரத்தின் கண்ணாடி ஜன்னல்கள் மேலிருந்து கீழ் நோக்கி 15 டிகிரி சாய்மானத்தில் அமைக்கப்பட்டு இருப்பதை பார்த்திருப்பீர்கள். சூரிய வெளிச்சம், விளக்கும் வெளிச்சத்திலிருந்து வரும் பிரதிபலிப்புகளை குறைப்பதற்காக இந்த முறையில் ஜன்னல்கள் அமைக்கப்படுகின்றது.

விமானத்தில் பாதரசம் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. விமானத்தின் பல பகுதிகள் அலுமினியத்தில் தயாரிக்கப்பட்டிருப்பதால், பாதரசத்தால் அதிக பாதிப்படையும் அபாயம் இருப்பதால் தடை செய்யப்பட்டு இருக்கிறது.

விமானப் பயணம் என்பது ஆபத்து நிறைந்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அமெரிக்காவில் விமானத்தில் இறப்பவர்களின் விகிதத்தையும், காரில் பயணிப்பவர்களில் இறப்பவர்களின் எண்ணிக்கையையும் வைத்து ஒப்பீடு செய்துள்ளனர்.

அதில், விமானத்தில் பறப்பவர்களில் 11 மில்லியன் பேரில் ஒருவருக்கு விபத்தால் மரணமடையும் வாய்ப்பு இருக்கிறதாம். ஆனால், காரில் பயணிப்பவர்களுக்கு 5,000 பேரில் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இங்கிலாந்து, நார்வே மற்றும் சுவீடன் நாடுகளை சேர்ந்த பைலட்டுகளிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், ஆய்வில் கருத்துக் கூறிய பைலட்டுகளில் பெரும்பாலானோர் விமானம் பறக்கும்போது தூங்கிவிடுவதாக தெரிவித்துள்ளனர். அத்துடன், கண் விழித்து பார்க்கும்போது உடன் இருக்கும் துணை விமானியும் தூக்கத்தில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை உலகம் முழுவதும் நடந்த விமான விபத்துக்களில் 80 சதவீதம் அளவுக்கு விமானம் வானில் மேல் எழுந்த 3 நிமிடங்களுக்கு உள்ளாகவும், தரை இறங்குவதற்கு 8 நிமிடங்கள் முன்பாகவும் நடந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, விமானம் டேக் ஆஃப் செய்யும்போதும், தரை இறங்கும்போதும்தான் பெரும்பாலான விபத்துக்கள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.

விமானத்தில் பயணிக்கும் 5 பேரில் ஒருவர் பறக்கும்போது அதிக பயத்துடன் இருக்கின்றனர். இதற்கு ஏவியோபோபியா என்று குறிப்பிடப்படுகிறது.

விமான பைலட்டுகள் பறக்கும் நேரத்திற்கு மட்டுமே கணக்கிட்டு சம்பளம் வழங்கப்படுகிறது. விமானம் தாமதமாக வரும்போது காத்திருப்பது, விமானம் தாமதமாக புறப்படுவது, விமானம் புறப்படுவதற்கு முன்னர் இருக்கும் பணிகள் கணக்கில் கொள்ளப்படுவதில்லையாம்.

அவசர சமயங்களில் விமானத்தின் வெளியேறும் வழிக்கு 5 வரிசைக்கு அப்பால் அமர்ந்திருப்பவர்களுக்கு விமானத்தை வெளியேறுவதில் சிக்கல் இருக்கிறதாம். அதாவது, குறித்த நேரத்தில் அவர்களால் வெளியேறுவது கடினம் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரத்தில், 90 வினாடிகளுக்குள் விமானத்தில் உள்ள அனைவரையும் வெளியேற்றும் வசதியுடன் கதவுகள் அமைக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச விமானப் போக்குவரத்து ஆணையத்தின் விதி.

விமான விபத்துக்களில் உயிரிழப்பவர்களைவிட, விமானங்கள் வெளியிடும் நச்சுப் புகையால் அதிகமானோர் உயிரிழப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் 10,000 பேர் விமானங்களிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கார், டூ வீலர் வாங்கும் பலர் எதிர்பார்க்கும் முக்கிய விஷயம், எவ்வளவு மைலேஜ் கொடுக்கும் என்பதே. அவ்வாறு, விமானத்திற்கு கணக்கிடும்போது போயிங் 747 விமானமானது ஒரு கேலனுக்கு 0.2 மைல் மட்டுமே மைலேஜ் தரும். அதேநேரத்தில், அதிகபட்சமாக 550 பயணிகள் வரை இந்த விமானத்தில் பயணிக்க முடியும் என்பதையும் பார்க்க வேண்டும்.

அன்புடன் உங்கள் சேவகன் சுபாஷ்!!!!!

Wednesday 27 May 2020

லோகஸ்ட்டால் அடி மேல் அடி வாங்கும் இந்தியா(The locust starts to attack our nation)



டெல்லி: 26 ஆண்டுகளில் மிக மோசமான அளவிற்கு பயிர்களை லோகஸ்ட் வெட்டுக்கிளிகள் தாக்கி வருவது விவசாயிகளை வேதனை அடையச் செய்துள்ளது. கொரோனா பீதி ஒரு புறம் இருக்கும் நிலையில் இந்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

Locust வெட்டுக்கிளிகள் என்பது என்ன தெரியுமா?
சோமாலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் லோகஸ்ட் என்ற ரக வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்துவிட்டன. தற்போது இவை ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் படையெடுத்து வந்து பயிர்களை நாசப்படுத்துகின்றன.

வெட்டிக்கிளிகள் கண்டம் விட்டு கண்டம் பறந்து வருவது இந்த ஆண்டு இந்திய விவசாயத்திற்கு பெரும் அபாயம் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை அளித்துள்ளது. தம்மாத்துண்டு பூச்சி உணவு உற்பத்திக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துமா என உங்கள் மனங்களில் எழுவது புரிகிறது.





வெட்டுக்கிளிகள்

சாதாரண வெட்டுக்கிளிகளை போல் அல்லாமல் லோகஸ்ட் ரக வெட்டுக்கிளிகள் தனியாக வந்தால் பிரச்சினை இல்லை. ஒரு கூட்டமாக வந்துவிட்டால் அந்த இடத்தில் விவசாயமே செய்ய முடியாது. அந்த அளவுக்கு பயிர்களை சேதப்படுத்தும். மழை பெய்த பிறகு ஈரப்பதம் இருக்கும் இடங்களில் இவை ஈசல் போல் உற்பத்தியாகும் இந்த லோகஸ்ட் வெட்டுக்கிளிகள்.



பூச்சிகள்

அதிலும் ஆப்பிரிக்காவில் உற்பத்தியாகும் லோகஸ்ட் வெட்டுக்கிளிகள் தான் மிகவும் ஆபத்தானவை. ஒரு சதுர கிலோமீட்டரில் கோடிக்கணக்கில் வெட்டுக்கிளிகள் உருவாகும். இந்த வெட்டிக்கிளிகளின் ஆயுட்காலம் 6 மாதங்கள் மட்டுமே. உணவு உற்பத்தியை இந்த பூச்சிகள் அழித்ததால் உணவுக்கே பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.



இனப்பெருக்கம்

ஆப்பிரிக்காவில் இனப்பெருக்கம் செய்யும் இந்த பூச்சிகள் ஏமன், ஈரான், பாகிஸ்தான் வழியாக இந்திய எல்லைக்குள் நுழைகின்றன. வரும் வழியெல்லாம் இனப்பெருக்கம் செய்யும் இந்த வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்கின்றன. உணவு மற்றும் பாதுகாப்பு அமைப்பை பொருத்தவரையில் லோகஸ்ட்கள் உலகில் பழமையான புலம்பெயர்ந்த பூச்சிகளாகும்.



பெரிய பூச்சிகள்

இந்த பூச்சிகள் சாதாரண வெட்டுக்கிளிகளிடம் இருந்து மாறுபட்டவை. இவை அதிக தூரத்திற்கு புலம்பெயர்ந்து செல்லும். இருப்பதிலேயே மோசமான வெட்டுக்கிளி என்றால் அவை பாலைவன வெட்டுக்கிளிகள்தான். ஒரு பெரிய பூச்சி அதன் எடைக்கேற்ப உணவை தினமும் உண்ணும் ஆற்றல் கொண்டது. ஒரு சிறிய சதுர கி.மீ. கொண்ட இடத்தில் 80 மில்லியன் பெரிய பூச்சிகள் இருக்கும்.


25 ஆண்டுகள்

இவை ஒரு நாளில் 35 ஆயிரம் மக்களின் உணவை உண்ணும். இவை 150 கி.மீ. தூரம் வரை தினமும் பறக்கும். இந்திய பெருங்கடலில் அவ்வப்போது ஏற்படும் புயல்களால் இந்திய- பாகிஸ்தான் எல்லையை நோக்கி வந்துள்ளன. எத்தியோபியா, சோமாலியாவில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் சேதத்தை அதிகரித்துள்ளது. இந்தியாவில் 26 ஆண்டுகளில் மிகப் பெரிய பயிர் தாக்குதல் தற்போது நடைபெறுகிறது. அதுபோல் கென்யாவில் 70 ஆண்டுகளில் தற்போது நடந்துள்ளது மிகப் பெரும் தாக்குதல் ஆகும்.


விவசாயிகள்

2.5 முதல் 3 கி.மீ. தூரம் கொண்ட பூச்சிகள் தற்போது இந்தியாவுக்கு வந்துள்ளன. இவை எங்கு பச்சை பசேல் என காட்சியளிக்கிறதோ அங்கு செல்லும். இவற்றை அழிக்க தீயணைப்பு துறை தயார் நிலையில் உள்ளது. ராஜஸ்தானில் 33 மாவட்டங்களில் இந்த பூச்சிகள் படையெடுத்து வந்துள்ளன. இதனால் விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர். ஏற்கெனவே கொரோனா பாதிப்பால் விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் நலிந்துள்ள நிலையில் தற்போது இந்த பயிர் சேதம் விவசாயிகளை மேலும் கவலையடையச் செய்துள்ளது.

Tuesday 26 May 2020

ஸ்மார்ட் போன்களில் நாம் உண்மையென நம்பிக்கொண்டிருக்கும் பொய்யான தகவல்கள்(Myths about Smartphone)



 உலகம் முழுவதும் மொபைல் போனின் பயன்பாடு இன்றியமையாததாக மாறியுள்ளது. காலை எழுவது முதல் இரவு தூங்குவது வரை, செய்தி, சமூக வலைதளம் என தினம் நூறுமுறை மொபைல் போனை நோட்டம் விடும் பழக்கம் நம்மில் பலருக்கு வந்துவிட்டது. இவ்வளவு பரவலாக மொபைல் பயன்பாடு இருக்கும் நேரத்தில், இன்னும் நம் மத்தியில் ஸ்மார்ட் போன்கள் பற்றி இருக்கும் சில தவறான நம்பிக்கைகளை இந்த பதிவில் பார்க்கலாம்....

பேட்டரியை இரவு முழுவதும் சார்ஜ் செய்யக் கூடாது: இது பொதுவாகவே எல்லோர் வீட்டிலும் இருக்கும் ஒரு கருத்து. ஆனால், தற்போதுள்ள ஸ்மார்ட்போன் உலகில், முழுவதும் சார்ஜான மொபைல்கள், சார்ஜருடன் இணைந்திருந்தால் கூட, தானாகவே மின் இணைப்பை துண்டித்துக் கொள்ளும் திறன் கொண்டவை.

பேட்டரியை சார்ஜ் செய்யும் முன் அதை முற்றிலும், அதாவது 0% வரை பயன்படுத்திவிட்டு பின் சார்ஜ் செய்தால், பேட்டரியின் ஆயுள் நீண்ட நாள் நிலைக்கும் என கூறுவதும் தவறு. பழைய பேட்டரிகளுக்கு இது உதவினாலும், தற்போது எல்லா போன்களிலும் பயன்படுத்தப்படும் லித்தியம் அயான் பேட்டரிகள், அடிக்கடி செய்தாலே நீண்ட நாட்கள் நிலைக்கும்.

மொபைல் கம்பெனி வழங்கும் சார்ஜரை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என கூறுவது சுத்தப் பொய். தங்கள் நிறுவன பேட்டரிகளை அதிக விலை கொடுத்து மக்கள் வாங்க வேண்டும் என்பதற்காக மொபைல் நிறுவனங்கள் கிளப்பி விட்ட கட்டுக் கதை இது. அதற்காக மிகவும் மலிவான தரமில்லாத பேட்டரிகளை வாங்கக் கூடாது. அது மொபைலை நிச்சயம் பாதிக்கும். அதேநேரம், தரமான பேட்டரி சார்ஜர் நிறுவனங்கள் பல உள்ளன. அவற்றை உங்கள் மொபைல் நிறுவனம் வழங்கும் பேட்டரியை விட பாதி விலைக்கு பெறலாம். அவற்றால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

பேக்கிரவுண்ட் ஆப்: மொபைலில் நாம் பயன்படுத்தி வரும் பல ஆப்கள் பின்னணியில் ஓடிக்கொண்டே இருக்கும். அவற்றை நீக்க பேட்டரி சேவிங் ஆப்கள் பல வந்துவிட்டன. ஆனால், நிஜத்தில் அவையெல்லாம் தேவையற்றவையே. பின்னணியில் ஓடும் ஆப்களை நம் மொபைலே, தானாக நிறுத்தி வைத்து விடும். அடிக்கடி பயன்படுத்தும் ஆப்களை திரும்ப திரும்ப க்ளோஸ் செய்து பின் மீண்டும் ஓபன் செய்வது தான் பேட்டரியை பாதிக்குமாம். இதுபோன்ற ஆப்கள் இல்லாமலே போன் சிறப்பாக செயல்படுவது தான் நிஜம்...

வைஃபை ஆன் செய்து வைத்திருந்தால் பேட்டரி சீக்கிரம் காலியாகிவிடும் என்பது மற்றொரு தவறான தகவல். நிஜத்தில், ப்ளூடூத், வைஃபை போன்றவற்றை பயன்படுத்தி, பைல்களை அனுப்பும்போதும், டவுன்லோட் செய்யும் போதும் மட்டுமே அவை பேட்டரியை பயன்படுத்துகின்றன. சாதாரணமாக அவை ஆன் செய்திருக்கும் போது, பேட்டரியை பயன்படுத்தாது.

மொபைல் போனில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் உடலை பாதிக்கும் என கூறுவதை இதுவரை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை. போனை சட்டை பாக்கெட்டில் வைத்தால் ஆபத்து என பலர் கூறுவதுண்டு. ஆனால், அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் தயாரிக்கும் மொபைல் போன்கள் அனைத்துமே கதிர்வீச்சு சோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டு, பாதுகாப்பானவை என சான்றிதழ் அளிக்கப்பட்ட பின் தான் விற்பனைக்கு வரும். செல்போன் டவர் கதிர்வீச்சை, மொபைல் போனுடன் ஒப்பிடக் கூடாது. அது தனி விவகாரம்...

இது எல்லோருக்கும் ஓரளவு தெரிந்த ஒன்று தான்... போன்களில் அதிக ரேம், கேமராவின் மெகாபிக்சல், ப்ராசசர் ஆகியவை இருந்தால், அவை சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு உதிரி பாகங்களை பயன்படுத்துவதால், அதன் பெர்பார்மன்ஸ் மாறுபடும். அதனால் தான், 8 மெகாபிக்சல் கொண்ட ஐபோனில் எடுக்கப்படும் படங்கள், 12 மெகாபிக்சல் கொண்ட சில ஆண்ட்ராய்டு போன்களை விட சிறப்பாக உள்ளன.

மொபைல் போனை விமானத்தில் பயன்படுத்தினால், விமானத்திற்கு வரும் சிக்கனலில் குளறுபடி ஏற்படும் என ஒரு வதந்தி உண்டு. அதனால் தான், சில விமானங்களில் போனை அணைத்து வைக்க சொல்வார்கள். ஆனால், தற்போதய விமானங்களில் உள்ள தொழில்நுட்ப கருவிகள் மிகவும் அதிநவீனமானவை. அதனால், மொபைலின் சிக்னல் அவற்றை பாதிக்கும் அளவு குறுக்கிடாது. எல்லோரும் மொபைலை ஒரே நேரம் பயன்படுத்தினால், சில நேரம் பைலட்களுக்கு சிறிய இடையூறு கொடுக்குமென்றாலும், எந்த வகையிலும் இது ஆபத்தானது இல்லை.

பெட்ரோல் பங்க்குகளில் மொபைலை பயன்படுத்தக் கூடாது என சொல்வதும் தவறான அணுகுமுறை தான். மொபைலால் பெட்ரோல் பங்க்குகளில் விபத்துக்கள் ஏற்படுவதாக கூறப்படுவது ஆதாரமில்லாத வதந்திதான். சில இடங்களில் பேட்டரிகள் வெடித்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கும் சாதாரண மொபைல் பயன்பாட்டுக்கும் தொடர்பு கிடையாது.

8 ஜி.பி யோ, 32 ஜி.பி மொபைல் போன் ஸ்டோரெஜ் எவ்வளவு என்பது முக்கியமில்லை... எவ்வளவு இடத்தை ஃப்ரீயாக வைத்திருக்கிறோம் என்பதைப் பொருத்துதான் மொபைல் போன் பர்ஃபாமன்ஸ் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதிலும் உண்மை இல்லை... ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக் கணக்கில் புதிய ஸ்மார்ட் போன்கள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொன்றிலும் அதிக ஃப்ரீ ஸ்பேஸ் இருக்கிறது. அதற்காக அனைத்தும் சிறப்பாக செயல்படுகிறது என்று கூறிவிட முடியுமா? என்ன மொபைல், எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்துதான் அதன் பார்ஃபாமன்ஸ் இருக்கும்

Monday 25 May 2020

ஆப்பிள் நிறுவனம் பற்றிய சில சுவாரசிய தகவல்கள்(Some interesting facts about Apple)


Apple என்ற பெயர் வர காரணம் Steve Jobs இற்கு பிடித்த பழம் என்பது தான்.

Apple இன் கணினிகளை பயன்படுத்தும் போது புகைப்பிடித்தால், உத்திரவாதம் ரத்தாகிவிடும்.

Apple கம்பனியில் 100 000 பேருக்கு மேல் வேலை பார்க்கிறார்கள்.

அமெரிக்க திறைசேரியில் உள்ள பணத்தின் இரண்டு மடங்கு பணம் Apple இடம் உள்ளது.

iPod ஐ உருவாக்கிய Tony Fadell, தன்னுடைய iPod ஐ Real Networks மற்றும் Philips கம்பெனிகளுக்கு விற்க அணுகியபோது, அவை மறுத்து விட்டன. Apple வாங்கிக்கொண்டது.

1983 இல் Lisa என்ற பெயருடைய ஒரு தனியாள் கணினியை வெளியிட்டது Apple. ஆனால் அது தோல்வியடைந்தது. சுமார் 2,700 Lisa கணினிகள், Utah எனும் இடத்தில் எரிக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.

நியூட்டனின் ஆப்பிள் தான் முதல் Apple logo.

Apple இன் தலைமையகத்தில் வேலை செய்யும் ஒருவரின் சராசரி சம்பளம் வருடத்திற்கு 125 000 USD.

Apple iPad இல் பயன்படுத்தப்படும் Retina display, Samsung ஆல் உருவாக்கப்பட்டது.

208 780 000 ஐபோன்கள் 2018 இல் விற்கப்பட்டன

Apple பிரபலமடைந்திருக்காத காலத்தில், Apple ன் துணை நிறுவுனர் ஒருவர், தன்னிடமிருந்த Apple நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் 800 டாலர்களிற்கு விற்றார். அதன் இன்றைய மதிப்பு 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

Siri யிடம் நாம் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் Apple இற்கு அனுப்பப்பட்டு பிறகு சோதிக்கப்பட்டவுடன் மட்டுமே அதை செயல் படுத்துகிறது..

iPad என்ற பெயரின் உரிமத்தை Apple, 4 பில்லியன் USD இற்கு வாங்கியது.

Sunday 24 May 2020

நமக்கு தெரிந்த கோவில்களின் தெரியாத உண்மைகள்(We didn't know the truth of known temples)

நமக்கு தெரிந்த கோவில்களின் தெரியாத உண்மைகள்

1. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான் மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார்.

2. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு – தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.

3. திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.

4. 108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.

5. கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. இவரை சற்று தொலைவிலிருந்து பார்த்தால் 50 வயது முதியவர்போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர்போலவும் காட்சி தருகிறார்.

6. விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனாபிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.

7. சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள்.காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.

8. அருப்புக்கோட்டை அருகிலுள்ளது திருச்சுழி என்ற ஊர். இங்குள்ள சிவன் கோயில் காணப்படும் நடராசர் பச்சிலை மூலிகையால் ஆனவர்.

9. தஞ்சை அருகே தென்குடித் திட்டையிலுள்ள வசிஸ்டேஸ்வரர் ஆலய கருவறை விமானம் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இக்கல் சந்திரனிடமிருந்து கிரணங்களைப் பெற்று நீராக்கி, அதை 24 நிமிடங்களுக்கு ஒருமுறை மூல லிங்கத்தின்மீது வீழச் செய்து அபிஷேகம் செய்கிறது. நாம் சாதாரணமாக கோயில் உண்டியலில் பணம், ஆபரணங்களைத்தான் காணிக்கையாகப் போடுவோம். ஆனால், இலங்கை கதிர்காம முருகன் ஆலயத்தில் காணிக்கையாக காசோலை (செக்) எழுதிப் போடுகின்றனர்.

10. உலகிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை மலேசியா நாட்டின் தலைநகரான கோலாம்பூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 140 அடி உயரம் கொண்ட சிலை இது. தமிழக சிற்பிகள் 15 பேர் சேர்ந்துதான் இச்சிலையை உருவாக்கினார்கள்.

11. திருக்கண்ணமங்கை தலத்தில் உள்ள தாயார் சன்னதியில் இரு ஜன்னல்கள் உள்ளன. இதில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வலப் பக்கம் சஞ்சாரம் செய்யும் போது தேனீக்கள் வலப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியன் இடப்பக்கம் சஞ்சாரம் செய்யும் போது இடப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. இந்த அதிசயத்தை இன்றும் காணலாம்.

12. புதுக்கோட்டை மாவட்டம், பரக்கலக் கோட்டை ஆவுடையார் கோயில் திங்கட்கிழமை மட்டுமே திறந்திருக்கும். நள்ளிரவு 12.00 மணிக்கு மட்டுமே வழிபாடு. பிற நாட்களில் கோயில் மூடியிருக்கும்.

13. ராமநாதபுரத்திற்கு வடகிழக்கே பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் உள்ள அரசமரம் விழுது விடுகிறது. அதன் விழுது நிலத்தில் படிந்து மரமாகி விட்டால் மூலமரம் பட்டுப் போய்விடுமாம். பிறகு புதிய மரம் வளர்ந்து விழுது விடுமாம். இப்படி ஓர் அதிசய அரசமரம் தலவிருட்சமாக பெருமை சேர்க்கிறது.

14. திவ்யதேசமான திருவட்டாறில் சயனக்கோலத்திலுள்ள பெருமாளை மூன்று வாசல் வழியாக தரிசக்க வேண்டும். முதல் வாசலில் சிரசை தரிசிக்கலாம். இரண்டாவது வாசலில் சரீர தரிசனம் பெறலாம். மூன்றாவது வாசலில் பாத தரிசனம் பெறலாம். கேரள கோயில் என்பதால் கமகமக்கும் சந்தனத்தை அரைத்து பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். இங்குள்ள ஆறு வட்டமாக இருப்பதால் இவ்வூருக்கு திருவட்டாறு என்று பெயர்.

15. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் நடராஜர் சன்னதிக்கு வலப்புறம் குழந்தையை (முருகனை) இடுப்பில் ஏந்திய நிலையில் உள்ள பார்வதி அம்மனை தரிசிக்கலாம். இந்த அபூர்வக் காட்சி எங்கும் காணக் கிடைக்காதது.

16. பெரும்பாலும் கோயில்களில் எல்லாம் வெண்கலம், பஞ்சலோகம் அல்லது கற்சிலைகள் தான் இருக்கும். பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் உள்ள கிருஷ்ணர், பலராமர், சுபத்திரா உருவங்கள் மரத்தினால் ஆனவை. அரிசி, பருப்பு, காய்கறிகளைச் சேர்த்து சமைத்ததே பிரசாதமாகப் படைக்கப்படுகிறது. இதற்கு பாக் என்று பெயர்.

17. பொதுவாக ஆஞ்சநேயருக்குத் தான் வடைமாலை சாற்றுவார்கள். ஆனால் திருவையாறு தலத்தில் தெற்கு கோபுர வாசலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடைமாலை சாற்றும் வழக்கம் இன்றும் நடைபெறுகிறது. சில சமயம் லட்சம் வடைகளைக் கொண்ட மாலைகள் கூட சாற்றப்படுவது உண்டு.

18. கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டையூரில் நூற்றியொரு சுவாமி மலைப்பகுதியில் உள்ள ஒரு குகையில், சுமார் ஓரடி உயரமுள்ள கல் அகல்விளக்கு இருக்கிறது. இந்த விளக்கில் இளநீர் விட்டு எரித்தால், விளக்கு அழகாக எரிகிறது. இவ்வாறு விளக்கு ஏற்றுபவர்களின் குடும்பத் துன்பங்கள் நீங்கி, மனஅமைதியும் சாந்தியும் கிடைக்கிறதாம். இளநீர் விளக்கை அது இருக்கும் இடத்திலிருந்து சற்றே இடம் மாற்றினாலும் அது எரிவதில்லை என்பது ஆச்சர்யம்.

19. முருகப்பெருமானுக்கு கட்டப்பட்ட முதல் திருக்கோயில் என்ற சிறப்பை புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஒற்றைக்கண்ணூர் தலம் பெறுகிறது. முதலாம் ஆதித்த சோழன் இக்கோயிலைக் கட்டியதாகக் கூறுகின்றனர். இக்கோயிலில் முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப் பெருமான் ஒரு திருக்கரத்தில் ஜெபமாலையுடனும் மறு திருக்கரத்தில் சின்முத்திரையுடனும் இருந்து அருள்பாலிக்கிறார்.

20. ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள விநாயகபுரம் நவசக்தி விநாயகர் கோயிலின் கருவறைக்குப் பின்புறம் ஆவுடையார் லிங்கம் உள்ளது. இந்த லிங்கம் காசியில் இருந்து கொண்டுவரப்பட்டது. இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், காசியிலுள்ள லிங்கத்திற்குச் செய்த பலனாம். இதற்கு பக்தர்கள் அனைவருமே அபிஷேகம் செய்யலாம். இந்தக்கோயிலின் பாதிப்பகுதி தமிழ்நாடு எல்லையிலும், மீதிப்பகுதி ஆந்திர எல்லையிலும் உள்ளது.

21.எல்லாப் பெருமாள் கோயில்களிலும் தீர்த்தம், துளசி, குங்குமம் மட்டும்தான் கொடுப்பார்கள். ஆனால் இவற்றுடன் மிளகும் சேர்த்துக் கொடுப்பது கோவை மாவட்டம் சூலூரில் உள்ள திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலில் மட்டும்தான்.

22. நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், பாளையங்கோட்டையைக் கடந்தவுடன் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு தேங்காய் விடலை போட்டால், சிரட்டை (கொட்டாங்குச்சி) தனியாகவும், தேங்காய் தனியாகவும் சிதறும். இந்தப் பிள்ளையார் சிரட்டைப் பிள்ளையார் என்றே அழைக்கப்படுகிறார்.

Saturday 23 May 2020

நாம் அனைவரும் தவறானவர்களோ???(We Are all Wrong?)


நாம் கவனிக்க தவறும்… கவனத்துக்குறியவைகள்!!!

அன்றாட வாழ்வின் அவசரத்தில்…

பொருள் தேட வேண்டிய வேட்கை…
வெற்றியாளர்களாய் ஆகவேண்டிய போட்டி…
அதிகாரத்தை அனைத்துக் கொள்ள துடிக்கும் ஆசை…
நாம் கனவிலும் நினைத்துப் பார்க்கா வாழ்க்கைக்கான கனவு…
இப்படி நாளுக்கு நாள் எப்படி வாழ்கிறோம்… எதற்காக வாழ்கிறோம்… ஏன் வாழ்கிறோம்… யாருக்காக வாழ்கிறோம்…
என எண்ணெற்ற கேள்விகளுக்கு விடைகான விழைகையில்…
விளங்காமலே போகிறது நாம் வாழ்வையே இழக்கிறோம் என்பது…
வாழ்க்கை மிக மிக அழகானது. அனு அனுவாய் அனுபவிக்க கூடியது என நமக்கு நாமே சொல்லிக் கொடுக்க தவறிவிட்டோம். வாழ்க்கையை அதன் போக்கிலே போகவிட்டு வாழ்வது கடினமானதுதான். இன்றைய பொருள் முதல்வாத சமூகத்தில் அதற்கு அத்தனை சாத்தியமும் இல்லைதான்.
ஆனாலும் வாழ்வை வாழமுடியும் ரசனையோடு.
பணம் கொண்டவன் மடி மட்டுமல்ல… மனமும் கனமாகவே இருக்கும் இன்றைய சூழலில், மனிதர்களுக்கு முக்கியத்துவம் தரும் மனப்போக்கு நம்மிடமிருந்து மறைய துவங்கியிருக்கிறது. அமெரிக்க அதிபரின் இந்திய பயணத்தில் பரிமாறப்பட்ட உணவுகளும், அவர் விரும்பி செய்த பணிகளையும் அறிந்து கொள்ள நம்மிடையே இருந்த ஆர்வம், நம் சக மனிதர்களின் மேல் இல்லாமல் இருக்கிறதே ஏன்???
நம் அன்றாட வாழ்வில் நம்மை கடந்து போகும் எத்தனையோ மனிதர்கள் நம்மால் கவனிக்கப்படாமலேயே போகிறார்களே… இதை என்றாவது கவனித்திருக்கிறோமா நாம்?
அடுத்த தேசத்தின் அழுகுரலுக்கு மனமிறங்கும் நாம்… நமக்கு பக்கத்தில் இருந்து நம்வாழ்வுக்காக பயன்படுபவர்களை பரிவுடன் பார்க்கும் பண்பும் குறைந்து கிடக்கிறோமே ஏன்?
நம் வீட்டுக் கழிவறைகளின் தூய்மையை உறுதிப்படுத்திக் கொள்ள நாம் எடுக்கும் எந்த அக்கறையும் நம்மால் கொடுக்காப்படாத நிலையில்தானே தெருக்களில் இருக்கும் பாதாள சாக்கடைகள் அடைத்து… கழிவு நீர் காவிரியாக கரைப் புரண்டோடுகிறது… மூக்கை பொத்திக் கொண்டு நாம் கடந்துப்போகும் நம் கழிவுகளுக்குள்  மூழ்கி சுத்தம் செய்யும் தோழர்களை என்றாவது கரிசனத்தோடு பார்த்ததுண்டா நாம்??? கைகுலுக்கி நன்றி சொன்னதுண்டா நாம்???
மின் இனைப்பு துண்டிக்கப்பட்ட இரவுச் சூழலை வாழ்ந்துப் பார்த்தவர்களுக்குதான் தெரியும் அதன் கொடுமை…இப்படியே இரவை கடத்திய பின்னர் காலையில் மின் இனைப்பை சரி செய்து கொடுக்கும் தோழருக்கு ஒரு நன்றி சொல்லவும் நம் மனங்கள் முன்வருவதில்லையே ஏன்??? முரணாக ஒரு “பீஸ் கேரியரை” மாட்டவா ஐம்பது ரூபாய் என அவரிடம் பேரம் பேசுகிறோமே…
தங்களுக்கு பொழுது போகாத வேளைகளில் எல்லாம் பெட்ரோல் / டீசல் விலையை ஏற்றுகிறது எண்ணெய் நிறுவணங்கள்… அதை மவுணமாகவே ஆமோதிக்கிறது மத்திய அரசு. இவர்களை எதிர்த்து ஏன் நாம் தெருக்களில் வந்து போரிடவில்லை ? மாறாக விலையேற்றத்தின் விளைவாக 7 ரூபாய்க்கு பயணித்த இடத்துக்கு 10 ரூபாய் என வாங்கும் “ஷேர் ஆட்டோ” ஓட்டுனரிடம் சண்டைப் பிடிக்கிறோமே ஏன்?
வாழ்க்கை வேகமாகி கொண்டேதான் போகிறது. மறுப்பதற்கில்லை… காலை நேர பரபரப்பு கடந்து கணவனோடு அலுவலகம் பறக்கையில் வழியில் தென்படும் கோயிலகளுக்கும்… அதனுள் உறங்கும் கடவுளுக்கும்… பயணித்தப்படியே… வேண்டுதலையும்… காணிக்கையையும் முத்தமாக கொடுத்துவிட்டு கடக்கிறோம். இயந்திர வாழ்வின் எதார்தமான தருணங்கள் இவை…
இருப்பினும் வாழ்க்கை மிக மிக அழகானது… அனுபவித்து, ரசித்து வாழ்கிறவர்களுக்கு…
நீங்கள் அடுத்தமுறை சந்திக்கும்…

குப்பை அள்ளும் தோழருக்கு “நன்றி” சொல்லுங்கள்…

காய் விற்கும் பாட்டியிடம் “போயிட்டு வருகிறேன்” என சொல்லிப்பாருங்கள்…

தொழிலாளர்களுக்கான ஊதியத்தை “குறைக்காமல்” கொடுத்துப் பாருங்கள்…

தெருவோரக் கடைகளில் “பேரம் பேசாமல்” பொருள் வாங்கிப் பாருங்கள்…

எதிர்படும் எல்லோரையும் சிரித்த முகத்தோடே கடந்து பாருங்கள்…

இன்றைய நிமிடங்களை விட… அந்த தருணங்கள் அற்புதமாக இருக்கும்…
முயற்சித்துவிட்டு சொல்லுங்கள்… மீண்டும் சந்திப்போம்… சேர்ந்து சிந்திப்போம்!!!

என்றும் அன்புடன் உங்கள் சேவகன் சுபாஷ்!!!

Thursday 21 May 2020

மறக்கமுடியாத தூத்துக்குடி இனப்படுகொலை மே-22(The genocide of Thoothukudi for Sterlite)


தமிழக வரலாற்றின் கறுப்பு தினம்- மே 22


மே 22. தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் பதிமூன்று பேர் கொல்லப்பட்ட தினம். தமிழக வரலாற்றின் கறுப்பு நாள்.  அரசப் பயங்கரவாதத்தின் சாட்சியாகத் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளது. உள்ளிருப்புப் போராட்டத்திற்கு ஜனநாயக வழியில் அகிம்சை முறையைக் கடைபிடித்துச் சென்று மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகமே மயானமாகிப் போன நாள். ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்த நாள். ஜாலியன் வாலாபாக் படுகொலையைவிட கேவலமான படுகொலையை தமிழக அரசே மேற்கொண்ட நாள். தன் மக்களைத் தானே கொன்ற எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு, தானும் பாசிசத்தின் எச்சமே என்பதை எண்பித்த நாள். முள்ளிவாய்க்கால் படுகொலையைப்போல இதுவும் வரலாற்றின் பெருந்துயரம்.  இன்னும் தமிழக அரசு தான்தோன்றித்தனமாக மக்களின் ஜனநாயக வலிமையை மதிக்காமல் ஸ்டெர்லைட் ஆலயத்தின் நிர்வாகத்திற்குப் பணிந்துபோவதும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிரான இந்த ஆலையை நிரந்தரமாக மூடி, சீல் வைக்காமல், கண் கட்டி வித்தை காட்டுவதும் தமிழகத்தின் சாபக்கேடு.
அரசு கொலை செய்த 13 பேரின் உடற்கூறாய்வு அறிக்கை அரசப் பயங்கரவாதத்தின் சாட்சியமாக உள்ளது. மே மாதம் 24, 25-2018 அன்று நடை பெற்ற உடற்கூறாய்வை அவசர கதியில்
செய்துவிட்டு, நீதிமன்றத்தின் வழி காட்டுதலுக்குப் பிறகு, ஜூன்மாதம் ஆறாம்தேதி நடைபெற்ற கூராய்வில் இந்தத் துப்பாக்கிச் சூடு மிக மிக அரு கிலிருந்து நடத்தப்பட்டுள்ளது, குண்டுக் காயத்தைச் சுற்றி ஏற்பட்டுள்ள தீ வளையம், கறுப்பு வளையம் ஆகிய அப்ராய்சன் காலர் (யசெயளiடிn உடிடடயச), கிரிஸ் காலர் (பசநயளந உடிடடயச)  ஆகியன இதனை உறுதி செய்கின்றன.
சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேரில் 12 பேர்
தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் சுடப்பட்டுள் ளனர்; அதுவும் உயிரைத் தற்காத்துக்கொள்ளத் தப்பி ஓடும்போது சுடப்பட்டுள்ளனர்.  18  வயது
ஸ்னோலினுக்கு பின் கழுத்தில் பாய்ந்த குண்டு வாய் வழியாக வெளியேறியுள்ளது. 22 வயது ரஞ்சித் குமாருக்கு மூளை சிதிறியுள்ளது. 40 வயது ஜான்சிக்கு மூளைச் சதைகளே காணாமல் போய் உள்ளன. 45 வயது தமிழரசனுக்கு பின்னந்தலையைத் துளைத்து நெற்றி வழியாகக் குண்டு வெளியேறியுள்ளது. 40 வயது கிளாஸ்டனுக்கு இதயப்பகுதியில் குண்டு துளைத்துள்ளது. செல்வசேகர் குண்டுகளே துளைக்காமல் பூட்ஸ் கால்களால் மிதிக்கப்பட்டு, லத்தியால் அடிக்கப்பட்டே கொல்லப்பட்டிருக்கிறார். மணிராஜனுக்கு தலையில் ஜெயராமனுக்கு முகத்தில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்துள்ளன. கந்தையா என்பவரின் உடலில் குண்டு முதுகுப் புறத்திலிருந்து இதயப்பகுதி வழியாக வெளியேறியுள்ளது. இவர்கள் கொல்லப்பட்டவிதத்தை வைத்துப் பார்க்கும்போது கூட்டத்தைக் கலைக்க அல்ல; கொன்று குவிக்கவே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது என்பது நிரூபணமாகியுள்ளது.  ஜூன் மாதமே மருத்துவர்கள் கொடுத்த உடற்கூறாய்வு அறிக்கையை ஏழுமாதங்கள் கழித்து, தாமதமாக மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு குடும்பத்தினரிடம் அரசு ஒப்படைத்துள்ளது வெட்கக்கேடானது. கலவரப் பகுதிகளில் காயம்பட்டவர்களையும் அடிபட்டவர்களையும் சிகிக்சைக்குக் காவலர்கள் எடுத்துச் செல்லாததே மிகப் பெரிய விதிமீறல். மே 22 நம் தமிழர் வரலாற்றின் கறுப்பு தினம்.
துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பிறகு ஏறக்குறைய ஒராண்டுவரை வராத தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வெட்கமின்றி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற சூழலில் வாக்குச் சேகரிக்க பலத்த பாதுகாப்போடு தூத்துக்குடிக்குள் நுழைந்ததே மடியில் கணம் என்பதை எண்பித்தது.
  ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் பத்து கட்ட விசாரணை முடிந்தும் இன்று வரை இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்யாதது அவரது நடுநிலைமையை சந்தேகத்திற்குள்ளாக்குகிறது. கூட்டத்தைக் கலைக்க
மார்புக்குமேல் ஏன் சுட்டீர்கள் என்றால் காவல் துறையிடம் தக்க பதில் இல்லை. சிபிஐ தரப்பும் இதுவரை துப்பாக்கிச் சூடு தொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை; வழக்கிலும் வழக்கு விசாரணையிலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை.  இதுவும் மிகவும் ஆபத்தானது. மனித உரிமைப் போராளி முகிலன் துப்பாக்கிச் சூடு சம்பந்தான அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஆதாரத்தை வெளியிட்ட அன்றே காணாமல் போய்விட்டார்? அரசும் மௌனம் காக்கிறது. கேள்வி கேட்ட முகிலன் எங்கே என்றால் அரசிடம் பதில் இல்லை. ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தும் புண்ணியமில்லை. அரசும் காவல்துறையும் தூத்துக்குடி மக்களின் ஒவ்வொரு அசைவையும் வெட்கமின்றி உளவுப்பார்த்துக் கொண்டிருக்கின்றன. துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு உத்தரவிட்டதாகச் சொல்லப்படுகிற துணைத் தாசில்தார்கள் கண்ணன், சேகர், சந்திரன் ஆகியோர் இன்னும் விசாரிக்கப்படவில்லை.  ஆக, தமிழகத்திற்கு உலக அளவில் தலைக்குனிவை ஏற்படுத்திய தமிழக அரசின் இந்தப் படுகொலை மனிதத்தன்மையற்றது; அநீதியானது; வெட்கக்கேடானது. இனி தமிழகக் காவல்
துறை, அரசின் ஏவல்துறையாகச் செயல்படாமல், மனிதத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
அரசு நிவாரணம் என்ற பெயரில் தன்னால் கொல்லப் பட்டவர்களின் உயிர்களுக்கு விலைபேசாமல், தன் தவறை உணர்ந்து மக்களிடமும் நீதிமன்றத் திடமும் மன்னிப்பைக் கேட்க வேண்டும். இனி ஒருபோதும் இப்படிப்பட்ட மனித உரிமை மீறல்கள்
நடைபெறாதவண்ணம் விதிமுறைகளை வகுக்க
வேண்டும். சிபிஐ அமைப்பு விரைந்து விசாரணையை முடித்து ஐனநாயகத்தைக் காக்க வேண்டும். காவல் துறை, மக்களை  உளவு பார்ப்பதை விட்டுவிட்டு,  விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பதை விட்டு விட்டு, மனித உரிமைக் காவலர்களாகச் செயல்பட வேண்டும். ஒரு நபர் விசாரணை ஆணையமும் காலத்தை நீட்டித்துக் கொண்டே சென்று மக்களின் வரிப்பணத்தை விழுங்காமல் விரைந்து முடித்து முழுமையான அறிக்கை யைத் தாக்கல் செய்ய வேண்டும். இடைக்கால அறிக்கையை இருவாரங்களுக்குள் தாக்கல் செய்து மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். எல்லா
வற்றிற்கும் ஆதி காரணமாக இருக்கிற ஸ்டெர்லைட் ஆலையை அரசு நிரந்தரமாக மூடி சீல் வைத்து, சட்டமன்றத்தில் தகுந்த சட்டம் இயற்றி, கார்ப்பரேட்டு
களின் கைக்கூலிகளாக அல்லாமல், மக்களின் சௌக்கிதாரராக, காவல்காரனாக இருக்க வேண்டும்.  13 பேர்களின் ஆன்மா இறைவனில் இளைப்பாறட்டும்! அவர்களின் உயிர்த்தியாகம் வரலாற்றில் போற்றப் படட்டும். மே 23 அதற்கான அறிவிப்பு நாளாக அமைந்திடட்டும்.  அரசு தன் தவறுகளிலிருந்தும் தன் கரங்களில் உள்ள இரத்தக் கறையிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ளட்டும். மே 22. தமிழகத்தில்  இன்னொரு நாள் நிகழாதிருக்கட்டும்

பேய்கள் பற்றிய சுவாரசிய தகவல்கள்-இதயம் பலவீனமானவர்கள் படிக்க வேண்டாம்(The facts about Ghost)

பேய் இருக்கா???


சாதாரண மனிதனின் கண்ணுக்குப் புலப்படுமா? அல்லது விசேஷமானவர்கள் கண்ணுக்குத்தான் புலப்படுமா? ஆட்களை பேய் பிடிக்குமா? பேய்களுடன் பேசுவது எல்லாம் உண்மை? போன்ற பல வினாக்கள் மனிதனின் ஆரம்ப காலம் முதலாகவே இருந்து கொண்டேதான் வருகின்றன. இத்தகு கேள்விகளுக்கான பதில், ஒரு சாரார் இவை அனைத்தும் உண்மை என்றும் ஒரு சாரார் இவை எல்லாம் கட்டுக் கதை என்றும் சொல்லும் போக்கே பன்னெடுங்காலமாக எமது சமூகத்தில் இருந்து வருகிறது.

சரி நாம் இப்போது பேய் பற்றிய சில சுவாரசியத் தகவல்களைக் காண்போம். பொதுவாகப் பேய் என்பது இறந்தவர்களின் உயிர் இந்த உலகைவிட்டுப் போகாமல் இந்த உலகத்திலேயே சுற்றித் திரிந்தால் அதனையே பலபேர் பேய் எனச் சுட்டுகின்றனர்.
ஆனாலும், பேய் என்பது மனித சமூகத்துக்கு ஒவ்வாத ஒரு அமானுஷ்ய சக்தி என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்ட்ட ஒன்று. மதக் கொள்கைகளும் இதனையே ஏற்கின்றன.

கிறிஸ்தவம் சாத்தான் என்றும் இஸ்லாம் சைத்தான் என்றும் கூறுவது மனித சக்திக்கு ஒவ்வாத அல்லது கடவுளுக்கு எதிரான கெட்ட சக்தியை எனலாம். இந்துக் கொள்கையில் இது பலவாறு பெருகிக் கிடக்கின்றது எனலாம். பேய் என்பதை ஆவி, பிசாசு, துர்ஆத்மா போன்ற பல பெயர்கள் கொண்டு அழைத்தாலும், இவற்றிடையே சில வேறுபாடுகள் உண்டு என்கின்றனர். தனது இறப்புக்காலம் வருவதற்கு முன் இறந்தவர்கள் பேயாக அலைவர் என்பது பெரும்பான்மையினரின் நம்பிக்கை. இது ஒரு மூடநம்பிக்கை எனினும் ஆன்மீக ரீதியில் இது அதிகளவில் நம்பப்படுகிறது.

ஆவி பற்றிய நூல்களில் பொதுவாக, ஆவியானது கால்கள் அற்று, கட்டான உடம்பு அற்று, வெள்ளை அல்லது கருமை நிற சாயலில் அந்தரத்தில் அலையும் எனக் கூறப்பட்டுள்ளது. சரி, இத்தகு ஆவி நமது அருகே அல்லது நமது வீட்டிலே இருக்கின்றாதா? என்பதை அறிய சில வழிகளை எம்முன்னோர் கூறி இருக்கின்றனர். அத்தகு முறைகளைக் காண்போம். திடீரென காரணமே இல்லாமல் நமது உடல் பதட்டம் அடைந்தால், நடுங்கினால் நம்மைச் சுற்றி அமானுஸ்யம் இருப்பதாக எண்ணலாம்.

இரவில் அமைதியாக இருக்கும் போது விசித்திரமான சப்தம் கேட்டால், அமானுஸ்யம் உலவுவதாக அர்த்தம். நீங்கள் இருக்கும் அறை அளவுக்கு அதிகமாகக் குளிர்ந்தால். அங்கு பேய் இருப்பதாக அனுமானிக்கலாம்.
பூனை, நாய் போன்ற விலங்குகளின் செயற்பாட்டை வைத்தும் உணரலாம். இத்தகு விலங்குகளின் பார்வைக்குப் பேய்கள் நன்றாகத் தெரியுமாம். நாய் முனுகிக் கொண்டு மக்களிடையே
 நெருங்கி வந்தால், அந்த நாய் பேயைக் கண்டுவிட்டதாகக் கொள்ளலாம். மேலும், நாய், பூனை போன்றவை அந்திரத்தைப் பார்த்து தனது செய்கையை வெளிப்படுத்தினாலும் பேய் உலாவுவதாக உணரலாம்.

    அடுத்து, நாம் இறந்த சடங்கின் போது பயன்படுத்தும் நறுமணத் திரவிய வாசம், சாதாரண நாளில் நுகர முடிந்தாலும் அந்த உயிர் அவ்வழி வருவதாக உணரலாம். அடுத்து, பேய் ஒரு வீட்டில் உள்ளது என அறிய, வீட்டின்  நடுவில் விளக்கேற்றி, தேங்காயை வைத்தால், தேங்காய் சுற்றினால் பேய் இருப்பதாகக் கொள்ளலாம்.
அடுத்து, பசு மாடு ஒன்றை வீட்டினுள் விட்டு, அது விரண்டு ஓடினால், பேய் இருப்பதாகக்கொள்ளலாம்.
இவ்வாறு பல வழிமுறைகளில் பேய் இருப்பதை உணர முடியும். பேயை உணர்வதற்குப் பல பண்பாட்டு மரபினரும் பல வழிகளை உரைக்கின்றனர்.

பேய் என்பது,
தங்களை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பும் பேய்கள் அறைகளில் நறுமணம் அல்லது வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன. பேய்கள் அல்லது ஆவிகள் ஆபத்தானவை அல்ல. விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும்.

எமது எதிர்காலத்தைபற்றி பேய்கள் நன்றாகவே தெரிந்து வைத்துக் கொண்டு சில நேரங்களில் அவற்றை கனவுகளின் மூலம் வெளிப்படுத்த முயற்சி செய்யும். பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings) உண்டு. ஆனால் உணர்வு (sense) மட்டும் இல்லை. பேய்கள் அல்லது ஆவிகளால் கொலை செய்ய முடியாது. ஆனால் ஒருவன்தன்னைத்தானே கொலை செய்யும் அளவுக்கு தூண்டி விடும் சக்தி உண்டு.


பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்களுக்கு மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள்வீட்டில் அருகில் இருக்க முடியும். இது சாதாரணமாக இறப்பவர்களது ஆத்மாவாகும். அகால மரணம் அடைபவர்கள் தனது இறப்புக் காலம் வரையிலும் இவ்வுலகத்திலேயே அலையுமாம். இவை தங்களுடைய ஆசையை நிறவேற்றப் பல முற்சிகளைச் செய்யுமாம். குழந்தை பேய்கள் தேவதைகள் என அழைக்கப்படுவார்களாம்.

பேய்கள் மனிதனுடன் தொடர்பு கொள்வதற்காக கனவுகள், மர்ம குறியீடுகள், தானாக எழுதுவது, சத்தம், புகை, போன்ற பல்வேறு வகையான தந்திரங்களை பயன்படுத்துகின்றன.
பேய்களுக்கு நேரம் காலம் தெரியாது என்றாலும், நள்ளிரவு நேரங்களில் பகலை விட கூடுதலாக அலையும். இலத்திரனியல் பொருட்கள், சத்தங்கள் இருந்தால் பேய்கள் வராது என்று நினைப்பவர்களும் உண்டு. ஆனால், பேய்களுக்கு இலத்திரனியல் பொருட்களின் வேகத்தையும், அதன் இயக்கத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் சக்தி உண்டு.
பேய்கள் ஒளிக்கீற்று, அமானுஷ்யக் கோடுகள், மூடுபனி ,கருநிழல், நிழலுக்குள் நிழல், மங்கலாக தெரிவது, கரு உருவம், காற்றுத் தூசிகள், காற்று போன்றவைகள் மூலம் தங்களை வெளிப்படுத்துகின்றன. முழு உருவத்தையும் வெளிப்படுத்துவது இல்லை. ஆனால் அதற்கான சாத்தியம் உண்டு. சலங்கை சத்தம், பெண்குரல் சிரிப்பு போன்றவை சினிமாவில் காண்பிக்க படும் அனைத்தும் கற்பனை மட்டுமே.

ஆவிகள் எப்படி ஏன் பூமிக்கு வருகின்றன என்பதைப் பற்றி பார்போம். ஆரம்ப அத்தியாயங்களில் மரணம் ஏற்பட்டவுடன் இறப்பு தேவதைகளால் உயிரானது அழைத்துச் செல்லப்படும் இடங்களைப் பற்றியும் அவைகள் எதிர்கொள்ளும் அனுபவங்களைப் பற்றியும் விரிவாகவே பார்த்து இருக்கிறோம். அப்படி பயணப்படும் நேரத்தில் அதாவது ஆவிகளுக்கான தண்டனையோ சன்மானமோ கொடுக்கப்படும் நேரத்திலும் அவ்வப்போது ஆவிகள் பூமிக்கு வர அனுமதிக்கப்படுவது உண்டு.

அதற்குக் காரணம் பூமியில் உள்ள ஆவியின் சந்ததியினர் இறந்துபோன அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள். அவர்களுக்காக என்ன என்ன செய்கிறார்கள் என்பதை சூட்சம் தேகிகள் உண்ர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். அப்படி அவர்கள் பூமிக்கு வரும்போது தங்களைப் பற்றி சந்ததிகள் மறந்து இருந்தால் ஆத்திரப்படுவார்கள். நினைவுகளோடு இருந்தால் ஆசிர்வதிப்பார்கள்.

மேலும் இறந்து போய் ஒரு வருடத்திற்குப் பிறகு சில குறிப்பிட்ட வரையரையளுக்கு உட்பட்டு ஒரளவு சுதந்திரத்துடன் ஆவிகள் பூமிக்கு வந்து செல்ல மேலுலகத் தேவதைகள்
அனுமதி அளிக்கின்றன. தங்களது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப சொர்க்கம் நரகம் என்ற வாழ்ககைத் தரத்தை ஆவிகள் மேலுலகில் பெற்றிருந்தாலும் அடுத்து ஓர் பிறப்பை அவைகள் பெறும்வரை பூமிக்கு வந்து செல்ல அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளது.

அவ்வப்போது ஆவிகள் தங்களது பூர்வ கால வசிப்பிடங்களுக்கு வந்து சென்றாலும் நிரந்தரமாக அவைகள் பூமியில் தங்குவது இல்லை. தங்கவும் முடியாது. கருடபுராணத்தின் மிகப் பழைய பிரதி ஒன்றில் ஆவிகள் ஒரு மாதத்தில் 240 நாழிகை
மட்டுமே பூமியில் நடமாட முடியும் என்று கூறப்படுகிறது. தற்காலத்தில் ஆவிகள் மனித உடலில் எவ்வளவு நேரம் தங்க முடியும் என்ற ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டபோது 15 நிமிடங்கள் மட்டுமே ஆவியால் மனித உடலை ஆக்கிரமிக்க முடியும் என்பது தெரியவந்து
உள்ளது.

இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது ஆவிகள் பூமியில் நிரந்தரமாகத் தங்க இயலாது என்பதும் அதே நேரம் பூமிக்கும் தங்களது சொந்த உலகிற்கும் அலைந்து கொண்டு இருக்க மட்டும்தான் முடியும் என்பது தெளிவாகிறது.

மேலும் பூமிக்கு வரும் ஆவிகள் தாங்கள் வாழ்ந்தபோது எந்த இடத்தில் விரும்பி வசித்தனரோ அந்த இடங்களுக்குத்தான் வந்து செல்ல விரும்புகிறது. உயிர் பிரிந்த இடத்தில்தான் ஆவிகள் நடமாடும் என்பது தவறான நம்பிக்கையாகும்.

இதை வைத்துப் பார்க்கும் போது ஆவிகளின் ஆயுட் காலம் எந்தக் கணக்கிற்கும் அகப்படாத ஒரு புரியாத புதிராகவே இருக்கும் என்று தோன்றுகிறது. பாவ புண்ணியங்களின் அளவில் சொர்க்க நரகங்கள் தீர்மானிக்கப்பட்டால் அவைகளில் வாசம் புரியும் காலம் பிறப்புக் கடவுகளின் கையிலேயே இருப்பது புரிகிறது.
யாருக்கு எப்போதும் பூமி வாசம் கொடுக்க வேண்டும் என்று அவன் கருதுகிறானோ அதுவரை ஆவிகள் ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆனாலும் கூட சூட்சம் தேகத்திலேயே வாழும்படி நேரிடுகிறது. அப்படி வாழ்வது தண்டனையா சன்மானமா என்பது நமக்குப் புரியவில்லை. அதைக் தெரிந்து கொள்ளும் ஆற்றலும் நமக்கு இல்லை....

Tuesday 19 May 2020

யாரும் அறிந்திடாத எகிப்திய பிரமிடு ரகசியங்கள்(Egypt Pyramids and Howard cotter)

பழங்கால ஏழு உலக அதிசயங்களில் என்றுமே எகிப்திய பிரமிடுகளுக்கு ஒரு நீங்கா இடம் உண்டு. இறந்த உடல்களை பாதுகாக்கவே இந்த பிரமிடுகள் என்று வெறுமனே சொல்லிவிட முடியாது. இதில் பழங்கால எகிப்தியர்களின் பிரம்மாண்டம், ஆன்மீக நம்பிக்கைகள், திகைப்பூட்டும் பழக்கங்கள், மர்மங்கள் என்று பல விஷயங்கள் புதைந்துள்ளன. அவை பழங்கால எகிப்தின் பண்பாட்டு குறியீடாக கருதப்படுகிறது. பண்டைய எகிப்தை ஆண்ட மன்னர்களில் ஒருவர் துட்டகாமுன். இவர் எகிப்த்தை ஆட்சி செய்து சுமார் மூவாயிரம் ஆண்டுகள் கழித்து துட்டகாமுனால் சென்ற நூற்றாண்டின் பிரபலமான மனிதர்களில் ஹாவர்ட் கார்ட்டர் ஒருவரானார். மன்னராட்சி முடிந்து மக்களாட்சி துவங்கியவுடன் அவர்களின் கோட்டைகளிலும் வழித்தடங்களிலும் ஆட்சியாளர்களும் சாமானியர்களும் புதையல் வேட்டையில் ஈடுபடுவது இயற்கையே. இதன் வழியில் நூற்றாண்டுகள் கடந்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹாவர்ட் கார்ட்டர் கண்டுபிடித்த பிரமிடுகளும் அதன் சுவராஸ்யங்களும் நம்மை கவரும் என்பதில் ஐயமில்லை.

ஆதிகால நம்பிக்கைகள்

எகிப்திய மன்னர்கள் “பரோக்” என்றழைக்கப்பட்டார்கள். நாகரீகம் வளராத ஆரம்ப காலங்களில் மன்னரையே கடவுளாக எதிப்தியர்கள் கருதினார்கள். அவரின் கட்டளைப்படியே சூரியன் கிழக்கே உதயமாகிறான், நைல் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது என்று எண்ணிக்கொண்டார்கள். பின் காலப்போக்கில் கடவுள் வேறு, மன்னர் வேறு என்றானது. பின் படையெடுப்பு, ஆட்சி மாற்றம், காட்சி மாற்றம், நாகரீகம் போன்றவைகளால் அவர்களின் நம்பிக்கைகள் மாறிக்கொண்டே வந்தது. பெரும்பாலான பண்டைய எகிப்தியர்களின் வாழ்க்கை மூன்று காலங்களை நம்பியே இருந்தது. விதைக்கும் காலம், அறுவடை காலம், நைல் நதியின் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலம். முறையான விவசாயத்தை அவர்களால் பின்பற்ற முடியாததால் அவர்களின் வாழ்க்கையின் பெரும்பகுதி பிரமிடுகளை கட்டுவதிலேயே கழிந்தன.





Egyptian Farmer (Pic: wikipedia)

எகிப்திய மம்மிகள் உருவான முறை

உலகளாவிய நாடுகளின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் எகிப்தை நோக்கி படையெடுத்த தருணம் அது. அதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அகழ்வாராய்ச்சியின் இறுதியில் கிடைக்கும் செல்வங்களில் பாதியை அவர்களே வைத்துக்கொள்ளலாம் என்று ஒரு விதிமுறை அமுலில் இருந்தது. எகிப்தியர்களின் நம்பிக்கைப்படி இந்த உடல் இறந்தவுடன் அது மறு உலகிற்கு செல்வதாகவும் அப்படி செல்லும்பொழுது அங்கு வாழ இந்த உடல் தேவை என்பதால் அந்த உடலை அழிக்காமல் பதப்படுத்தி பாதுகாத்து வந்தனர். உடலை பதப்படுத்துவதற்கு பல கட்டங்களாக அதன் ஈரப்பதம் நீக்கப்படுகிறது. இதை அவர்கள் வெற்றிகரமாக செய்ததால் தான் ஒரு மம்மியின் உடலை வைத்து இன்றும் அவர்கள் உருவத்தை நாம் கணிக்க முடிகிறது. எகிப்தில் குறிப்பிடத்தக்க மழை பெய்வதில்லை. எனவே வரலாற்று காலத்திற்கு முன் உலர்ந்த மணல் மற்றும் காற்றை பயன்படுத்தி உடலை பதப்படுத்தி பாலைவனத்தின் நிலப்பரப்பில் பெரும் குழியினை தோண்டி உடலை வைத்தனர். நூற்றாண்டுகள் கடந்து பின்பு இந்த முறை கட்டணத்திற்கு ஏற்றவாறு என்று மாறியது.





Mummy (Pic: huffingtonpost)

பிரமிடு கலாச்சாரம்

முதன் முதலில் பிரமிடு கட்டும் கலாச்சாரத்தை தோற்றிவித்த மன்னர் டிஜோசர். இவரது ஆட்சிக்காலம் கிமு. 2630 – கிமு. 2611. இவர் மூன்றாவது சாம்ராஜ்ய மன்னராவார். இதன் பின்னர் காலப்போக்கில் பிரமிடுகள் கட்டும் முறைகளிலும் அதன் வேலைப்பாடுகளிலும் பல மாற்றங்கள் செய்தனர். இறுதியாக இதற்கென்று ஒரு வடிவம் கொடுத்து, சிறந்த முறையில் பின்பற்றியது துட்டகாமுன் வாழ்ந்த நூற்றாண்டில் தான். எனினும் இதன் செலவுகள், தேவையான ஆட்கள், நேரம் இவற்றை கருத்தில் கொண்டு அடுத்த சில நூற்றாண்டுகளிலேயே இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. 15 ஆம் நூற்றாண்டின் மன்னர் மிக குறைவான செலவிலான பிரமிடில் அடக்கம் செய்யப்பட்டார்.





Mummified Legs
Mummified Legs (Pic: ancient-origins)

இறுதி சடங்குகளும் பிரேத பரிசோதனைகளும்

ராஜ பரம்பரையை பொருத்தவரை அவர்கள் உயிருடன் திடகாத்திரமாக இருக்கும் பொழுதே அவர்களுக்கான பிரமிடுகளை விருப்பப்படி கட்டி வேலைப்பாடுகளுடன் தயார் செய்து கொண்டார்கள். அவர்களின் மறைவுக்கு பின்னர் உடல் கட்டில் மேல் வைக்கப்பட்டு இறுதி சடங்குகள் நடத்தது. அந்த உடல் பேரீட்சை மதுவால் குளிப்பாட்டப்பட்டு நைல் நதி நீரால் கழுவப்படுகிறது. பின் ஒரு பக்கமாக உடல் அறுக்கப்பட்டு பாகங்கள் ஒவ்வொன்றாக வெளியில் எடுக்கப்படுகிறது. அந்த பாகங்கள் பிரத்யேக பெட்டிகள் அல்லது கானோபிக் ஜார்கள் (Canopic Jars) எனும் காற்றுப்புகாத பளிங்கினாலான ஜாடிகளில் கல் உப்பு கொண்டு பதப்படுத்தப்படுகிறது. இதயம் மட்டும் உடலுடனே விடப்படுகிறது. மனித உடலின் வடிவம் கெடாமல் முழுவதுமாக சுத்தம் செய்யப்படுகிறது. உடல் முழுவதும் உப்பு மற்றும் இதர கலவைகள் கொண்டு ஈரப்பதம் அகற்றப்பட்டு சணல் நார்களை கொண்டு துணியினால் முழுவதும் சுற்றப்படுகிறது. பின்பு போலி கண்கள் பொருத்தப்படுகிறது. உடலுக்கு விபத்து ஏதும் ஏற்படாமல் இருக்க சில மந்திரங்கள் சுற்றப்பட்ட துணிகளில் எழுதப்படுகிறது. மோதிரம் அனுவிக்கபட்டு இறுதி சடங்குகளை மதகுருமார்கள் கொண்டு நடத்தினார்கள். பிரமிடுகளுக்குள் பல அறைகள், பல பாதைகள் மற்றும் மன்னரின் உடலுக்கான சிறப்பு அறை என்று அனைத்துமே பளிங்கு கற்களால் கட்டப்பட்டது. பின்னர் கலைநயம் கொண்ட ஓவியங்கள், சிற்ப வேலைப்பாடுகள், பல ஆடம்பர பொருட்கள் கொண்ட பிரமிடுக்குள் உடல் வைக்கப்பட்டு பிரமிடு மூடப்படுகிறது.





Mummy
Mummy (Pic: ancient)

தொல்லியல் தேடல்

அது 18 ஆம் நூற்றாண்டின் இறுதியும், 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தின் நேரம். தொல்பொருள் ஆட்சியாளர்களுக்கு பாதி புதையல் என்ற விதி அமலுக்கு வருவதுக்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே பிரமிடு கொள்ளையர்களால் பல செல்வங்கள் களவு போனது. எஞ்சியுள்ளதை தூர்வாரிய ஆய்வாளர்கள் தங்கள் பணி முடிந்ததென ஒதுங்கி கொண்டனர். “கிங் டட்” அன்று அழைக்கப்படும் துட்டகாமுன் கல்லறை மட்டும் கண்டுபிடிக்கபடாமலே இருந்தது. கார்ணர்வோன் என்பவர் இதற்காக நிதியளிப்பதாக கூறி தொல்பொருள் ஆய்வாளர் ஹாவர்ட் காட்டரை அழைத்தார். கிங் டட் எகிப்தின் பரோக்காக கி.மு. 1324 ஆண்டில் 1௦ ஆண்டுகள் ஆட்சி செய்து தனது 19 ஆவது வயதில் இறந்து விடுகிறார். இவரை பற்றிய வரலாறு அதிகம் வெளியுலகிற்கு தெரியாத காலம் அது.





Archeology
Archeology (Pic: nationalgeographic)

ஹாவர்ட் காட்டர்

ஆங்கிலேய தொல்பொருள் ஆய்வாளரான காட்டர் பிறந்தது 1874 ஆம் ஆண்டு. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போல் பள்ளியில் இவரும் ஒரு புரிந்துகொள்ள முடியாத மந்தமான குழந்தையாக இருந்தார். பின்பு அவரை அவரின் அத்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். அங்கு தனியாக அவருக்கு கல்வியளிக்கப்பட்டது. இவரது தந்தை தொல்பொருள் ஆய்வாளர். அவருடன் இணைந்து பல பணிகளில் ஈடுபட்டு பின்பு இவரும் தனித்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார்.
ஹாவர்ட் காட்டர் “கிங் டட்” டின் கல்லறையை கண்டறிய ஒரு குழு ஒன்றை அமைத்து பணிகளை தொடங்கினார். சுமார் வருடம் 1907 ஆண்டு தொடங்கிய பணிகள் 1922 வரை நடந்தது. காட்டரால் “கிங் டட்” டின் கல்லறையை கண்டுகொள்ள முடியவேயில்லை. நிதியாளர்கள்களின் அழுத்தம் கழுத்தை நெரித்தது. காட்டர் சட்டவிரோதமாக தன்னுடைய சொந்த தேவைகளுகாக புதையலை எடுத்துக்கொண்டார் என்றெல்லாம் வதந்திகள் பரவியது. கடுமையான சிக்கல்களுக்கு ஆளானார்.
அந்த வருடத்தின் இறுதியில் ஒரு நாள், எதேச்சையாக அவர் அந்த பாதையை கண்டார். ஒரு கல்லறையின் சிதைந்த பாகங்களுக்கு அடியில் ஒரு படிக்கட்டுகள் இறங்கியது. அதன் வழியாக சென்ற பொழுது மன்னர் துட்டகாமுன் கல்லறையை இறுதியாக அடைந்தார். அரசு அதிகாரிகள் முன்னிலையில் நான்கு பெட்டிகள் திறக்கப்படுகிறது. மூன்றில் தங்க ஆபரணங்கள், ஆயுதங்கள், பிற பொருட்கள் இருந்தன. நான்காவது பெட்டியை வேகமாக திறக்கிறார் காட்டர். அது “கிங் டட்” டின் கல்லறை. காட்டரின் கனவு நிறைவேறியது என்றாலும் அந்த கல்லறையில் எழுதியிருந்த வாசகம் அனைவருக்கும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது. “கல்லறையை திறப்பவர்கள் விரைவில் மரணம் அடைவார்கள்” என்று எழுதியிருந்தது. ஏறத்தாழ 5௦௦0 பொருட்கள் அவரது பிரமிடுக்கு சுற்றி இருந்த அறைகளிலும், கல்லறையில் இருந்தும் கிடைத்துள்ளது. சுத்தமான இரும்பினால் ஆன குத்துவாள் அங்கிருந்து கிடைத்துள்ளது. எகிப்திய வரலாற்றில் அந்த பொருட்கள் அனைத்தும் மற்றொரு பரிமாணத்தை உலகிற்கு தந்தது.
கல்லறையில் எழுதியிருந்த இறுதி வரிகள் உயிர்பெற்றது. குறுகிய காலத்திலேயே காட்டருக்கு நிதியளித்தவர் மர்மக்காய்ச்சல் ஏற்பட்டு இறந்து விடுகிறார். பின்பு குழுவினரில் சிலர் இறந்து விடுகின்றனர். 12 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு விதமான புற்றுநோய் வந்து ஹாவர்ட் காட்டர் இறந்துவிட்டார். அந்த கல்லறையை திறந்த குழுவில் ஏறத்தாழ 12 பேர் குறுகிய காலத்தில் இறந்து விட்டனர். மிக இளவயதில் இறந்த “கிங் டட்”டின் சாபம் பலித்தது என்றே சொல்லலாம். அந்த பொருட்கள் உள்ள எகிப்தின் அருங்காட்சியகத்தை லட்சக்கணக்கான மக்கள் வருடா வருடம் பார்வையிட்டு செல்கின்றனர். ஹாவர்ட் காட்டர் பெயரை வரலாறு என்றும் நினைவில் கொள்ளும். 





Howard Carter (Pic: tommy-rot.blogspot)

பிரமிடுகளின் ஆழமான ரகசியங்கள்

நமக்கு பிரமிடுகள் என்றுவுடனே எகிப்து மட்டுமே நினைவுக்கு வரும். ஆனால் இது போன்ற ஆயிரக்கணக்கான பிரமிடுகள் மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா பகுதிகளில் காணப்படுகிறது. சீனாவில் 3௦௦ பிரமிடுகள், சூடானில் 200 பிரமிடுகள் என்று உலகளாவிய தேசங்களில் பரவலாகவே பிரமிடுகளை கட்டும் பழக்கம் இருந்துள்ளது. ஆனால் இவையனைத்துமே எகிப்தியர்கள் பயன்படுத்தியது போலான தேவைகளுக்கென்று குறிப்பிட்டு வரையறுக்க முடியாது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒரு ரஷ்ய மருத்துவரின் விளக்கங்களை கேட்டு ரஷ்ய அரசு சுமார் 1 44 அடி உயரம் கொண்ட பிரமிட் ஒன்றை கட்ட ஒப்புக்கொண்டது. ரஷ்ய மருத்துவரான விளாடிமிர் கிரஷ்னோஹோலோவெட்ஸின் பிரமிடுகள் பற்றிய கண்டுபிடிப்பு ஒரு புரட்சி என்றே சொல்லலாம். பிரமிடுகளுக்கு உள் இருப்பதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது.





Mummy Face
Mummy Face (Pic: nationalgeographic)

ரத்தத்தின் வெள்ளை அணுக்களின் கூட்டு எண்ணிக்கை உயர்கிறது. உடலின் திசுக்கள் மறுசுழற்சி வேகமாக நடக்கிறது. தாவர விதைகளை பிரமிடுற்குள் ஐந்து நாட்கள் வைத்தால் அதில் அதிகமான அறுவடை கிடைக்கிறது. செலிகர் நதியோரம் கட்டப்பட்ட பிரமிடு ஒன்றினால் அதன் ஓசோன் படலம் மிக தூய்மையானது. இவ்வளவு சிறப்பு மிக்க பிரமிடுகள் இந்தியாவில் ஏன் இல்லை என்ற கேள்வி உங்களுக்குள் எழுகிறதென்றால் சற்றே சிந்தியுங்கள். நமது தஞ்சாவூர் கோவில், கங்கை கொண்டசோழபுரம், ஐராதீஸ்வரர் கோவில், தாராசுரம், திருச்சி ஸ்ரீ ரங்கம் அனைத்து கோவில் கோபுரங்களும் அந்த பிரமிடுகளே.
Credits goes to:hindutamil

Sunday 17 May 2020

மே-18 இனப்படுகொலை (May-18 Genocide)


'மே 18' முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை – உலகத் தமிழர் நினைவில் மாறாத நாள்

                 தனக்குச் சொந்தமான நாட்டை அந்த இனத்திடமிருந்து பறித்து, அவர்களை உரிமைக்கு அந்நியமாக்கியதோடு மட்டுமின்றி, ஓர் இனத்தின் வரலாற்றையும் அவர்களின் வாழ்வியல் தொன்மையையும் அழிப்பது உலகின் உச்சக்கட்டமான இன அழிப்பாகும். தங்களின் உரிமைக்குப் போராடியத் தமிழினத்தை முற்றாக அழித்திட இலங்கை அரசு தமிழினத்திற்கு எதிராக கட்டவிழ்த்த கொடுமைகளும் கொடூரங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல. அஃது வார்த்தையால் விவரிக்க முடியாது வலி நிறைந்தது.

மே 15, 2009, இலங்கை இராணுவத்தால் வழங்கப்பட்ட புகைப்படம். இலங்கை, முள்ளிவாய்க்காலில், மே 18, 2009-ல், தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கொன்றதாகவும் சிறுபான்மை தமிழர்களின் தனிநாடு கோரிக்கையை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும் இலங்கை அரசு அறிவித்தது. (படம்/ இலங்கை இராணுவம், தலைமையகம்)

இன அழிப்பு என்பது, மனிதக் குலத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் மிக மோசமான அல்லது கொடூரமான குற்றச் செயலாகும். அரசியல், அரசாட்சி உட்பட ஓர் இனத்தின் ஆளுமையும் அதிகாரமும் மேலோங்கும் நிலையில், அங்கு வாழும் சிறுப்பான்மை இனத்திற்கு எதிரான கொடூரங்களும் கொடுமைகளும் அரங்கேறுவது இயல்பாகி விட்டது என்றுதான் கூற வேண்டும்.
அவ்வாறு தன் இனத்தைக் கொடூரமாக அழிக்கும் இனத்திற்கு எதிராக கிளர்ந்து எழும் போது, அஃது உள்நாட்டுப் போராகவோ அல்லது உள்நாட்டு பிரச்சனையாகவோ உருவெடுக்கிறது. அம்மாதிரியான சூழலில் சிறுப்பான்மை மற்றும் அதிகாரமற்ற நிலையில் இருக்கும் இனத்திற்கு எதிராக அதிகாரமும் ஆளுமையும் கொண்டிருக்கும் இனம் புரியும் அட்டூழியங்கள் எழுத்துகளில் விவரிக்க முடியாத ஒன்றாக விளங்குகிறது.
யூதர்களுக்கு எதிராக இட்லர் புரிந்த இன அழிப்பு பெரும் அச்சத்தையும் நினைத்துக்கூட பார்க்க முடியாத சம்பவங்களாகவும் இன்றைக்கும் நினைவுக்கூறுகிறோம். நாஜிக்களால் யூதர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புதான் கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த இன அழிப்பு என நம்மில பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், உண்மையில் அதற்கு முன்னதாகவே, அதாவது 1915-க்கும் 1920-க்கும் இடையில், சத்தமே இல்லாமல் துருக்கியில் ஓட்டோமான் இனத்தால் ஆர்மீனியர்கள் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து ருவாண்டாவில் இலட்ச ஹூடு இனத்தவர்கள் கொல்லப்பட்டதும் கூட இன அழிப்புதான்.
அதுமட்டுமின்றி, 1932 தொடங்கி 1933 வரையில் உக்ரையினில் சோவியத் ஒன்றியம் ஏற்படுத்திய செயற்கை பஞ்சம் கூட இன அழிப்புதான் என வகை செய்யப்பட்டிருக்கும் நிலையில், 1975-ல் கிழக்குத் தீமோர் மீது இந்தோனேசியப் படையெடுப்பும் இன அழிப்புதான் என்று வகை செய்யப்பட்டுள்ளது. மியன்மாரில், ரோஹிங்கியா இனத்திற்கு எதிராக அந்நாட்டு அரசாங்கமும் அந்நாட்டின் தேசிய இனமும் புரியும் கொடூரங்களையும் கொடுமைகளையும் இந்த உலகம் இன்னமும் வாய் மூடி பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
இன அழிப்பு என்பது ஓர் இனத்தைப் போரில் கொல்வதிலும் அவர்களை அடித்து துரத்துவதிலும் சித்திரவதை செய்வதிலும் அடங்கி விடவில்லை. மாறாய், அவ்வினத்திற்கு எதிராக உடல் மற்றும் உள ரீதியாக புரியப்படும் கொடூரமான அல்லது கொடுமையான செயல்களும், இனப் படுகொலைதான்.
மேலும், ஓர் இனத்தின் பிறப்பைத் தடுப்பது, வழுக்கட்டாயமாக வேறு இனக் குழுவோடு சேர்ப்பது ஆகியவையும் இன அழிப்புதான் என, 1948-ல் இனப் படுகொலை குறித்த ஐநாவின் தீர்மானத்தில் உள்ளடங்கியுள்ளது. இது 1951 ஜனவரியில் நடைமுறைக்கு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி இன அழிப்பு என்பது, ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சத்தமின்றி அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், உலகத் தமிழர்கள் மத்தியில் ஈழம் மலரும் எனும் பெரும் நம்பிக்கை தொடர்ந்துக் கொண்டிருந்தபோதுதான், அந்தக் கொடூரம் நடந்தேறியது. ஆம், சுமார் 10 ஆண்டுகளை எட்டிவிட்ட நிலையிலும், உலகத் தமிழர்களின் இதயங்களில் இன்னமும் குருதி வடிந்துக்கொண்டிருக்கும் மே 18 இன அழிப்புதான் அது.
இலங்கை அரசு அந்நாட்டில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட இன அழிப்பின் உச்சம் நடந்தேறிய நாள் தான் இந்த மே 18. பத்தாண்டுகளுக்கும் முன்னர் முள்ளிவாய்க்காலில், 2009-ம் ஆண்டில், இனவாத இலங்கை அரசால் இக்கொடூரம் நடத்தப்பட்டது. சுமார் 40,000 பேர் அன்றைய நாளில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களில் விடுதலை புலி உட்பட பெரும்பான்மையோர் அப்பாவி மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களைக் கேடயமாக வைத்து, முன் நகர்வினை மேற்கொண்டு புலிகளைச் சூழ்ச்சியால் வீழ்த்திய சிங்கள இராணுவம் அப்பாவி மக்களையும் கொன்று குவித்து மாபெரும் இன அழிப்பிற்கு வித்திட்டது. காலம் காலமாக தமிழ் மக்கள் ஆடிப்பாடி வாழ்ந்த ஊர் எங்கும், அன்றைய தினத்தில் மரண ஓலங்கள் ஒலித்தது, நிற்காமல் தொடர்ந்தது ஆங்காங்கே அழும் குரல்கள். துப்பாக்கி தோட்டாக்களுக்கும் எறிகுண்டுகளுக்கும் பலியானவர்கள் போக, எஞ்சியவர்கள் சித்தம் இழந்து முள்ளிவாய்க்கால் சூன்யமாகிப் போனது.
போர் நடக்கும் போது பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை, வழிபாடு தலங்கள் உட்பட பொது மக்கள் தஞ்சம் புகும் எவ்விடத்திலும் தாக்குதல் நடத்தக்கூடாது என்பது போர் மரபு. ஆனால், இலங்கையில், உச்சக்கட்ட போரின் போது சிங்கள இராணுவம் உயிரைக் காத்துக்கொள்ள மருத்துவமனையில் தஞ்சம் புகுந்தவர்களையும் விட்டு வைக்காமல் குண்டு மழை பொழிந்து கொன்றது. அவர்களின் நோக்கம், விடுதலை புலிகளை வீழ்த்துவதல்ல. மாறாய், தமிழினம் இருக்கவே கூடாது என்பதற்கு இதுவே தக்க சான்று.
மே 18-ல், முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலை போர் முடிவுக்கு வந்ததாக கூறப்படும் நிலையில் சிங்களப் பௌத்த பேரினவாத அரசாங்கம் சுமார் 15-க்கும் மேற்பட்ட நாடுகளின் உதவியோடு இந்த விடுதலை போரை முடிவுக்கு கொண்டு வந்தது.
போருக்கு ஒரு நியாயமும் மரபும் உள்ளது. வெள்ளைக் கொடியோடு சரணடைய வந்தவர்களைக் கூட கொன்று குவித்து மகிழ்ந்தது சிங்கள இராணுவம். போரில் எந்நிலையிலும் அப்பாவி மக்களைக் கொல்லக்கூடாது என்பது மனித உரிமைச் சட்டமாகும். இந்த மரபையும் மீறி 40,000-க்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசிற்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் வல்லரசுகளும் ஐநாவும் இத்தனை ஆண்டுகள் கடந்தும் மௌனம் காப்பதுகூட தமிழினத்திற்கு எதிரான ஒன்றானதாகவே சிந்திக்க வேண்டியுள்ளது.
இலங்கை அரசியலில் 1950-களில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் அரசியல், பொருளாதாரம், மொழி, மதம் சார்ந்ததாக அமைந்திருந்த வேளையில், சிங்கள அரசு தனது ஆளுமை மற்றும் அதிகாரத்தைப் பிற இனங்களின் மீது திணிக்கத் தொடங்கியது. இலங்கையின் பெரும்பான்மை இனம், பிற சிறுபான்மையினரை எதிரியாகப் பார்த்தது. அந்நிலையில் தமிழர்கள் பல கட்டங்களில் ஏமாற்றப்பட்டதோடு, தொடர்ந்து உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கவும் பட்டனர். தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு இதுவே முதன்மை காரணியமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலைக்காக, புலிகளின் போராட்டங்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தனித்துவமாகவே இருந்து வந்தது. பலவேளைகளின் புலிகளின் கைகள் ஓங்கியிருந்தது. புலிகளை வீழ்த்துவது அவ்வளவு எளிய காரியமல்ல என உணர்ந்த சிங்கள இனவாத அரசு, அப்பாவி தமிழ் மக்களைப் பிணை வைத்து பல்வேறு நாடுகளின் உதவியோடு, சூத்திரமாக வீழ்த்தியது. அதர்மமும் அநியாயமும் கொல்லப்பட்டதாக கொக்கரித்தது.
ஆனால், இது நிரந்திரமல்ல. மீண்டும் புலிகள் உயிர்த்தெழுவார்கள், தமிழீழம் உதயமாகும் என உலகத் தமிழர்கள் இன்னமும் நம்பிக்கையோடுதான் இருக்கிறார்கள்.
முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த உச்சக்கட்ட போரின் போது, படுகொலைகளும் பாலியல் வன்கொடுமைகளும் நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டது. அதனை சேனல் 4 எடுத்த வீடியோக்களும் புகைப்படங்களும் உறுதி செய்தன. ஐநாவும் இறுதிக்கட்ட போரின் போது, போர் மரபு மீறப்பட்டிருப்பதாகக் கூறி, அதற்கான நம்பகமான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறியது.
மேலும், அனைத்துலகப் போர் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கூறியது. ஆனால், இன்று வரை இலங்கை இனவாத அரசுக்கு எதிராக எவ்வித விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. சிங்கள இராணுவம் கொடுரமான போர் குற்றங்களைப் புரிந்துள்ளது வெட்ட வெளிச்சமாகியும், பத்து ஆண்டுகளை எட்டிவிட்ட நிலையிலும் எந்தவொரு விசாரணையுமின்றி, சிங்கள இனவாதம் உலா வருவது தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் குழித்தோண்டி புதைக்கப்பட்டு விட்டது என்றுதான் கொதிக்க வேண்டியுள்ளது.
முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த கொடூரங்களை உலகம் அறிந்திருந்தும், தட்டிக்கேட்கவும் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவும் யாரும் முன் வரவில்லை. ஓர் இனத்திற்கு எதிராக புரியப்பட்ட இன அழிப்பிற்கு உலகமே வாய்மூடி கிடப்பது என்னவொரு அவமானம். இலங்கையில் நிகழ்ந்த இன அழிப்பு அராஜகம், கொடுமைக்கு எப்போது நீதி கிடைக்கும் எனும் கேள்வி இன்னமும் உலகத் தமிழர்கள் மத்தியில் எழுந்துகொண்டுதான் இருக்கிறது.
கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி மே 2009 வரை சுமார் 1 இலட்சத்து 50 பேரைச் சிங்கள இனவாதம் படுகொலை செய்து, இன அழிப்பினை செய்துள்ளது. இது எவ்வளவு மோசமான வலி மிகுந்ததாக இருக்கும் என்பதை எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.
உறவுகளை இழந்து, உடமைகளை இழந்து, உடல் பாகங்களையும் இழந்து நடைபிணம் போல் உயிரை மட்டும் பிடித்துக் கொண்டு பிற நாடுகளில் நாடோடிகளாகவும் சொந்த நாட்டில் அகதிகளாகவும் வாழும் தமிழர்களுக்கு இந்த உலகத்தின் மனிதாபிமானம் தான் என்ன? பாதிக்கப்பட்டவன் தமிழன் தானே என அலட்சியம் தொடர்ந்தால் மீண்டுமொரு விடுதலை போர் கிளர்ந்தெழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனலாம்.
மலேசியாவில், தமிழீழத்திற்கான ஆதரவும் இலங்கை தமிழர்களுக்கான ஆதரவும் 1980-கள் தொடக்கம் இருக்கவே செய்துள்ளது. அரசியல் காரணியங்களுக்காக, ஈழத்தை ஆதரித்தவர்கள் எல்லாம் அதிகாரத்தில் அமர்ந்த பின்னர், ஈழம் குறித்தோ முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழினத்தைப் பற்றியோ வாய் திறக்காமல், நாற்காலியின் கால்களை இறுக்கப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இருந்த போதிலும், போர் காலக்கட்டத்திலும் சரி, நடப்பிலும் சரி, ஈழ மக்களுக்காக மலேசியாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பேரணிகளும் நினைவுக்கூறல் நிகழ்ச்சிகளும் நினைவுறுத்தல்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. முன்னாள் இலங்கை அதிபர் இராஜபக்‌ஷே மலேசியாவிற்கு வருகை புரிய முற்படும்போதெல்லாம், மலேசியத் தமிழர்கள் பெரும் எதிர்ப்பினை செய்துள்ளனர். அதனால், பலமுறை இராஜபக்‌ஷேவின் வருகை இரத்தும் செய்யப்பட்டுள்ளது.
2016-ல் இராஜபக்‌ஷே மலேசியத் தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி மலேசியாவில் நடைபெற்ற ஒரு மாநாட்டிற்கு வருகை புரிந்தபோது, மலேசியாவிற்கான இலங்கை தூதர்  விமான நிலையத்தில் தாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் கொடூரங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமைந்ததாகவும்.
அந்த வகையில், சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்தும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், அவர்களின் உரிமைகள் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என ஆக்கப்பூர்வமானப் பங்களிப்பையும் செயல்பாட்டையும் கொண்டிருக்கும் இயங்கியல் குழுக்களில் ஒன்றாக ஜொகூர் செம்பருத்தி தோழர்கள் தனித்துவமாக விளங்குகிறார்கள். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அவர்கள் ஈழ மக்களின் பிரச்சனைகளையும் அவர்கள் எதிர்நோக்கும் கொடூரங்களையும் கொடுமைகளையும் மலேசியர்களுக்கு விவரிக்கும் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டினை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வகையில், தொடர்ந்து மே 18-ஐ நினைவுக்கூறும் நிகழ்வும் உச்சக்கட்டப் போரினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்தும் ஒவ்வொரு ஆண்டும் மே 18-ம் நாள், ஜொகூர் பாருவில் அக்குழு அந்த நினைவுநாளை மேற்கொண்டு வருகிறது. 2009-ம் ஆண்டு தொடங்கி, இவ்வாண்டு 10-ம் ஆண்டாக ஜொகூர் செம்பருத்தி தோழர்கள் இந்நாளை நினைவுக்கூர்ந்து வருகிறார்கள்.
இம்முறை மே 18 நினைவேந்தல் நாள், இரவு மணி 8.30-க்கு, ஜாலான் உங்கு புவான், ஜொகூர் பாருவில் (இராஜ மாரியம்மன் ஆலயம் அருகில்) நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மே 18 துயரத்தை நினைவுக்கூறுவதன் மூலம், தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அந்தப் பேரவலத்தை மக்களிடமும் உலக அரங்கிலும் இன்னமும் ஒலிக்க செய்யவதோடு, போர் குற்றம் புரிந்த சிங்கள இனவாதத்தின் மீது அனைத்துலகப் போர் குற்ற நீதிமன்றத்தின் நடவடிக்கைக்கும் உட்படுத்த முடியும் என நம்பப்படுகிறது.
மே 18 நினைவுநாள் மலேசியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் நினைவுக்கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளாக ஜொகூர் செம்பருத்தி தோழர்கள், ஆறு கோரிக்கைகளை முன் வைத்து ஒவ்வொரு ஆண்டும் இந்த மே 18ஐ நினைவுக்கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவை :-
  1. இலங்கை அரசு மீது சர்வதேசப் போர் குற்ற விசாரணை வேண்டும்
  2. வடக்கு-கிழக்கு பகுதிகளில் இருக்கும் படையினரை மீட்டுக்கொள்ள வேண்டும்
  3. தமிழர்களின் நிலங்களைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும்
  4. தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்
  5. காணாமல் போனோரின் தகவல்கள் வழங்கப்பட வேண்டும்
  6. தமிழர் பகுதியில் சிங்களர் குடியேற்றத்தை நிறுத்த வேண்டும்
உச்சக் கட்டப் போருக்குப் பின்னரும் இலங்கையில் இன்னமும் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளும் அநீதிகளும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன. தமிழர்கள் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றம் செய்வதன் மூலம், தமிழினத்தின் வாழ்வாதார உரிமையைக் கூட சிங்கள அரசு மறுத்து வருகிறது. தமிழர்களுக்கான மறுவாழ்வு மலர்ச்சியினை அது மறுக்கிறது. அவர்களுக்கான வசதிகளும் தேவைகளும் நெரிக்கப்படுகின்றன.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டு வரும் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். ஐநாவின் தொடரும் மௌனத்தினாலும் உலக நாடுகளின் அலட்சியங்களினாலும், இலங்கையில் தமிழினத்தின் மீதிலான சிங்களப் பேரினவாதத்தின் அட்டூழியங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. இக்கொடுமைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் சர்வதேச நாடுகள், ஓர் இனத்தின் அழிவு என்பது உலகின் அழிவிற்கு முதல் புள்ளி என்பதை மறந்து விட வேண்டாம்.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அணி திரளுங்கள், சர்வதேசப் போர் குற்றத்தின் கீழ் இலங்கை விசாரிக்கப்படுவதை உறுதி செய்ய்யுங்கள். உலக தமிழர்களே இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கரம்கோர்ப்போம் – மே 18-ஐ, சர்வதேச நாளாக நினைவுக்கூர்ந்து உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்போம் வாரீர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறலை தடுத்து நிறுத்துவோம். அதற்கு நமது ஒவ்வொருவரின் குரலும் உலகெங்கும் ஒலிக்க வேண்டும்.