Saturday 19 January 2019

படித்தவுடன் பட பட வைக்கும் நிலவியல் செய்திகள்!!!!!


உங்களை அதிர வைக்கும் 19 நிலவியல் செய்திகள்



பலரும் நிலவியலை ஒரு சுவாரசியமான படிப்பாகக் கருதமாட்டார்கள்; ஆனால் படிக்க வேண்டிய முறையில் படித்தால் எல்லாமே உற்சாகம் ஊட்டக் கூடியவை தான். உதாரணத்துக்கு, நான் ஒரு தகவல் சொல்கிறேன் பாருங்களேன்.

நாம் எல்லாரும் பூமியின் உயரிய மலையாக எவரஸ்ட் சிகரத்தைக் கருதுகிறோம்; ஒரு விதத்தில் அது உண்மையாக இருந்தாலும் அதை வேறு விதமாகக் கூடப் பார்க்கலாம். கடல் மட்டத்திலிருந்து மிக உயரிய மலை எதுவென்று கேட்டால், ஹவாயின் கியா சிகரம் தான் அதற்குப் பதிலாக இருக்கும். சொல்லப்போனால், கடல் மட்டத்திலிருந்து கியா சிகரம் எவரஸ்ட்டை விட 4,436 அடி உயரமாக இருக்கிறது. பூமத்திய ரேகையைச் சுற்றிய பகுதிகளில் பூமி சற்று குண்டாக இருப்பது தான்  இதற்குக் காரணம்.

இதைப் போல் மேலும் சில சுவாரசியமான தகவல்களைக் கீழே காணலாம் :


1) இறந்த கடல் வருடந்தோறும் 1 மீட்டர் உயரம் தாழ்ந்து கொண்டே போகிறது; தற்போது அது கடல் மட்டத்திலிருந்து 429 மீட்டர் கீழே இருக்கிறது.


2) ஆஸ்திரேலியாவில் ஒரு வேலி 3.500 மைல் நீளத்துக்குச் செல்கிறதாம். நேப்பாளத்துடனான இந்திய எல்லையை விட அது இருமடங்கு நீளமாகும்.


3) ரஷ்யாவில் மட்டுமே 11 நேர மண்டலங்கள் இருக்கின்றன. இதன் அர்த்தம் என்னவென்றால், அந்நாட்டின் மேற்கு முனையில் காலை 7 மணியாக இருக்கையில், அதன் கிழக்கு முனையில் மாலை 6 மணியாக இருக்கமாம்.

4) வங்காளதேசத்தை விட ரஷ்யா 115 மடங்கு பெரிதாக இருந்தாலும், ரஷ்யாவை விட வங்காளதேசத்தின் மக்கள் தொகை 1 கோடிக்கும் அதிகமாக உள்ளது.


5) நம் சூரியக் குடும்பத்தின் உறுப்பினராக இருந்த புளூட்டோவை விட ரஷ்யாவின் நிலப்பரப்பு அதிகமாகும்.


6) 1811 – 1812 ஆம் ஆண்டுகளுக்கு இடையே, ரிக்டர் அளவுகோலில் எட்டிற்கும் மேலாகப் பதிவான 3 நிலநடுக்கங்களால், மிஸ்ஸிஸிப்பி ஆறு தலை கீழாகத் திசை மாறிப் பாயத் தொடங்கியதாம்.


7) நாம் அன்றாடம் இரவில் ரசிக்கும் நிலவை விட ஆஸ்திரேலியா அகலமானதாம். ஆம், அது உண்மை தான். நிலா 2,100 மைல் குறுக்களவைக் கொண்டிருக்கையில், ஆஸ்திரேலியா மட்டுமே 2,485 மைல்கள் அகலமானதாகும்.



8) இந்தியா, சீனா மற்றும் மேலும் சில தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தான், உலகின் பாதி மக்கள் வாழகின்றனர்.



9) பிடசோவா ஆற்றில் இருக்கும் பெஸண்ட் எனும் சிறிய தீவு, வருடத்தில் 6 மாதங்களுக்கு ஸ்பெயினின் அங்கமாகவும் , இதர 6 மாதங்களுக்குப் பிரான்ஸின் அங்கமாகவும் இருக்கிறது. அந்தத் தீவில் தங்க எவருக்கும் அனுமதியில்லை என்றாலும், தன் நாட்டின் அங்கமாக இருக்கையில் இரு நாட்டினர்க்கும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் மீன் பிடிக்க அனுமதி உண்டு.



10) உலகப் பிரசித்திப் பெற்ற மிகப் பெரிய அமேசான் ஆற்றின் குறுக்கே எந்தப் பாலமும் இல்லையாம்; அப்படியெனில் அந்த ஆற்றின் போக்கின் பலம் எவ்வளவு பலமாக இருக்கும் என சிந்தித்துப் பாருங்களேன்!



11) நியூசிலாந்திலுள்ள ஒரு மலைக்கு 85 ஆங்கில  எழுத்துகள் கொண்ட பெயரை வைத்துள்ளனர்; அது தான் உலகிலேயே மலைக்கு அளிக்கப்பட்ட நீண்ட பெயராகும்.

“Taumatawhakatangihangak oauauotamateaturipukaka pikimaungahoronukupokaiwhe nua kitanatahu” தான் அதன் பெயர்.


12) “A” தான் உலகில் ஓர் இடத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் மிகச் சின்ன பெயராகும். ஸ்கான்டாவேனியன் மொழியில் “A”  என்றால் ஆறு என்று பொருளாம். இந்தப் பெயர் வித்தியாசமாக இருப்பதால், இதைக் கொண்ட வழிகாட்டு அட்டைகளையெல்லாம் மக்கள் அடிக்கடித் திருடி வருகின்றனர்.



13) 1.3 சதுரக் கிலோமீட்டர் கொண்ட ஹான்ஸ் தீவின் மீது  கனடாவும் டென்மார்க்கும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்; இரு நாடுகளும் அத்தீவுக்கு உரிமைக் கோர வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.


கனடாவைச் சேர்ந்த கப்பற்குழுவினர் இத்தீவில் இறங்கினால், தீவில் நட்டப்பட்டிருக்கும் டென்மார்க் கொடியை அகற்றி விட்டு , கனடாவின் கொடியை நட்டு வைப்பர். பின், சில மது புட்டல்களையும் விட்டுச் செல்வர். இதே போல் தான், டென்மார்க்கைச் சேர்ந்தோர் இங்கு வந்து இறங்கினால், கனடா நாட்டுக் கொடியை அகற்றி விட்டு டென்மார்க்கின் கொடியை நடுவர்; பின் கனடா நாட்டவர்களுக்குச் சில மது புட்டில்களையும் விட்டுச் செல்வர்.


என்னே புதுமையான முறையில் போட்டிப் போடுகிறார்கள் பாருங்களேன்!



14) ஜப்பானின் தலைநகரின்  முந்தையப் பெயர், கியோட்டோ . அந்தப் பெயரின் எழுத்துகளை மாற்றித் தான், இப்போது டோக்கியோ என வழங்குகின்றோம்.



15) சீனாவில் இருக்கும் எர் வாங்க் டாங் எனும் குகையின் அளவைக் கண்டு நீங்கள் பிரம்மிப்படைவீர்கள்; அதன் பிரம்மாண்டத்தால், அதற்கெனத் தனியாக ஒரு வானிலையே இருக்கிறதாம்.



16) இத்தாலிக்குள்ளேயே, வாட்டிக்கன் சிட்டி மற்றும் சென் மரினோ என இரண்டு தனி நாடுகள் அடங்கி இருக்கின்றன.



17) பெரும்பாலும் ஐக்கிய ராஜ்ஜியமும் இங்கிலாந்தும் ஒன்றெனக் கருதுகின்றனர்; ஆனால், உண்மையில் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நான்கு நாடுகளும் சேர்ந்தது தான், ஐக்கிய ராஜ்ஜியம்.

18) ஒரு காலத்தில், உலகில் ஒரே ஒரு நிலப்பரப்பு தான் இருந்தது; அதற்குப் பாங்கெய்யா என்று பெயர். அதைச் சுற்றியிருந்த பெரும் நீர் நிலைக்குப் பாந்தலஸ்ஸா என்று அழைக்கப்படுகிறது.


19)தே போல், இந்தியா ஒரு சமயத்தில் ஆசியாவின் அங்கமாக இல்லாமல் இந்தியப் பெருங்கடலில் தனியாக இருந்தது. பின், காலம் போகப் போக, அந்தப் பெரிய நிலப்பரப்பு ஆசிய நிலப்பரப்புடன் மோதி இணைந்தது. இந்த மோதலால் உருவானது தான், இமய மலைத் தொடர்கள்.



No comments:

Post a Comment